செய்திகள் :

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 517 கோடியில் திட்டங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

post image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில்
ரூ.517 கோடி செலவில், 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து,
60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,00,168 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஜூன் 25) சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காட்பாடி ரயில் நிலையத்தில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர், வேலூர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள்  மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் வழங்கினார்.

பின்னர், வேலூர் மாவட்டம், பூதூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய நாள் (ஜூன் 26) முதல்வர் ஸ்டாலின் அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், 174 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 68 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 273 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதையும் படிக்க: கோவை, நீலகிரிக்குத் தொடரும் ஆரஞ்சு எச்சரிக்கை!

நடிகர் ஜி. சீனிவாசன் காலமானார்

நடிகர் ஜி. சீனிவாசன் உடல்நலக் குறைவால் இன்று மதியம் காலமானார்.இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்கொண்ட ஜி. சீனிவாசன் (95) உடல்நலக் குறைவு காரணமாக சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கில் கிருஷ்ணா சிக்கியது எப்படி? - காவல் துறை விளக்கம்

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்த நிலையில், இன்று(ஜூன் 26) நடிகர் கிருஷ்ணாவை சென்னை காவல்துறையினர் கைது செய்துனர்.இது குறித்து... மேலும் பார்க்க

பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு அவசியம் இல்லை! - இபிஎஸ்

முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை திர... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கு யுபிஎஸ்சி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டுத் தேர்வுக்கு யுபிஎஸ்சி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்!

வால்பாறையில் பெய்துவரும் கனமழையால் கருமலை இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில... மேலும் பார்க்க

ஆனி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்!

ஆனி மாதத்தில் சுபமுகூர்த்த தினத்தன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப் பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க