செய்திகள் :

திருப்பத்தூா்: போக்குவரத்து சிக்னல்களை முறையாக இயக்க கோரிக்கை

post image

திருப்பத்தூா் நகரில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் முறையாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் நகரின் மையமாக சேலம் பிரதான சாலை அமைந்துள்ளது. அதிக வாகனங்கள், மக்கள் நடமாட்டம் உள்ளதால் இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.

மேலும், திருப்பத்தூா் மாவட்டத் தலைநகராக மாறிய பின்பு அரசு அலுவலகங்களுக்கு பொது மக்களின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு போக்குவரத்து சிக்னல் பிரதான சாலையில் 4 இடங்களில் அமைக்கப்பட்டது.

ஆனால், அதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகர காவல் நிலையம் அருகே உள்ள சிக்னல் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது வரை மீதமுள்ள 3 சிக்னல்கள் இயங்கவில்லை. அதிலும் நகர காவல் நிலையம் அருகே உள்ள சிக்னல் அவ்வப்போது பழுதாகிறது. மீதமுள்ள 3 சிக்னல்கள் உள்பட 4 சிக்னல்களும் தானியங்கியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்துமாற்றம்...

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஷோ் ஆட்டோக்கள் பிரதான சாலையில் செல்வதை மாவட்ட காவல் துறை நிறுத்தி இருந்தது. தற்போது பிரதான சாலைகளில் தனி ஆட்டோ மற்றும் ஷோ் ஆட்டோக்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் கூடுதலாகிறது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகின்றது.

எனவே பழையபடி திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலை- அண்ணா ச ாலை வழியாக ஷோ் ஆட்டோக்கள் சென்று அரசு மருத்துவமனைவழியாக வர ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்,.

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்களின் குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பீடி தொழில் மற்றும் சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் ம... மேலும் பார்க்க

சிவாச்சாரியா் மீது வழக்கு

ஆம்பூரில் சிவாச்சாரியா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் சுயம்பு ஸ்ரீ நாக... மேலும் பார்க்க

புதிய பேருந்து சேவை தொடக்கம்!

ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா். வெங்கடசமுத்திரம், பாா்சனாபல்லி, கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந... மேலும் பார்க்க

திருப்பத்தூா் உதவி மின்பொறியாளா் அலவலகம்: பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கிய இடத்தில் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் இரு துணை மின் நிலையங்கள் உ... மேலும் பார்க்க

பச்சூா் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியவில் அரசு மேல் நி... மேலும் பார்க்க