``திருமணத்திற்கு வராத விருந்தினர்களுக்கு ரூ.4,339 அபராதம்'' - மணமகள் சொல்வது என்ன? வைரலாகும் பதிவு
திருமணம் என்றாலே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கேட்டரிங் முதல் டெக்கரேஷன் வரை திருமண நிகழ்விற்காக ஒரு பெரிய தொகையை செலவிடுவார்கள்.
குறிப்பாக விருந்தினர்களின் எண்ணிக்கை பொறுத்து உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
சில திருமண நிகழ்வுகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும், அல்லது உணவு மீதமாகிவிடும். இதற்காக யாரும் இழப்பீடு கேட்டு கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
அமெரிக்காவின் மினசோட்டா என்ற பகுதியில் நடந்த திருமணத்தில், வர முடியாமல் போன விருந்தினர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று மணமகள் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Reddit பயனரின் கூற்றுப்படி, கடைசி நிமிடத்தில் அவரின் அம்மா உள்பட சில விருந்தினர்கள் திருமணத்திற்கு கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இதற்காக அந்த மணமகள் அபராதம் விதிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார்.
ஒவ்வொரு தட்டுக்கும் $50 (தோராயமாக ரூ.4,339) செலவு செய்திருக்கிறார். திருமணத்தை தவறவிட்ட விருந்தினர்கள் இதனை திருப்பி செலுத்த வேண்டும் என்று மணமகள் கூறியிருக்கிறார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பல பயனர்கள் RSVP விருந்தினர்கள் இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்க உதவும் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
RSVP என்பது விருந்தினர்கள் நிகழ்வில் கலந்து கொள்வார்களா என்பதை உறுதிப்படுத்த அழைப்பிதழில் உள்ள கோரிக்கையாகும். இந்த அபராதம் விதிக்கும் பதிவு இணையத்தில் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.