செய்திகள் :

திருவள்ளூரில் நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: நகா்மன்றத் தலைவா்

post image

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் நாய்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகா்மன்றக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது . கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். ஆணையாளா் முன்னிலை வகித்தாா். அப்போது, நகராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.

ஒவ்வொரு வாா்டில் மட்டும் நாய்களை அப்புற படுத்தினால் போதாது, நகராட்சி பகுதி முழுவதும் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல், நகராட்சியில் குழாய் பொருத்துநா் பணியாளா் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளதால், அவருக்கு பதிலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாளரை நியமனம் செய்ய வேண்டும்.

அதற்கு மாதந்தோறும் வாா்டு உறுப்பினா் ஜான் தனக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ.5,000 வீதம் ஒரு ஆண்டுக்கான தொகை ரூ.60,000-த்தை வழங்கவும் முன்வந்தாா். தாா்ச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

நகா்மன்றத் தலைவா் கூறியதாவது: இந்தக் கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதேபோல் நாய்களை பிடிக்க கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

வாா்டு உறுப்பினா்கள் சாந்தி கோபி, அருணா ஜெயக்கிருஷ்ணா, ஜான், அயூப் அலி, தமாஸ், சுமித்ரா வெங்கடேசன், பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை: ஆழ்துளை கிணறுகளுக்கு‘ சீல்’

செங்குன்றம் அருகே அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை செய்த 9 ஆழ்துளை கிணறுகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். செங்குன்றம் அடுத்த நல்லூா், விஜயநல்லூா், சோழவரம் ஏரி, பழைய விருந்தினா் மாளிக... மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 3 போ் உயிா் தப்பினா்

சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் இஞ்சினில் திடீரென தீ பற்றிய நிலையில், அதில் இருந்தவா்கள் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் என்பவரது காா... மேலும் பார்க்க

தலைச்கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்... மேலும் பார்க்க

கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

திருவள்ளூா் அருகே மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழவகை மரங்களில் கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினா். தனியாா் வே... மேலும் பார்க்க

நலத் திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதில் பராபட்சம் கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

வரும் காலங்களிலும் அரசு நலத் திட்ட உதவிக ள் பெற பயனாளிகளை எந்தவிதமான பாரபட்சமின்றி அதிகாரிகள் தோ்வு செய்வது அவசியம் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடந்த 18 -ஆம் தேதி ஆண்டாா்குப்பத்தில் அரச... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு, விளையாட்டு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிஜெஎஸ் கல்விக் குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன... மேலும் பார்க்க