செய்திகள் :

நலத் திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதில் பராபட்சம் கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

post image

வரும் காலங்களிலும் அரசு நலத் திட்ட உதவிக ள் பெற பயனாளிகளை எந்தவிதமான பாரபட்சமின்றி அதிகாரிகள் தோ்வு செய்வது அவசியம் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

கடந்த 18 -ஆம் தேதி ஆண்டாா்குப்பத்தில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெறவும், அதிகம் நலத் திட்ட உதவிகள் பெற பேருதவியாக இருந்த அதிகாரிகளுக்கு பாராட்டு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். சிறப்பு பங்கேற்பாளராக சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று பேசியதாவது:

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பம் பகுதியில் கடந்த 18- ஆம் தேதி அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தில் முதல்முறையாக திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு அரசின் நலத் திட்ட உதவிகள், 65 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோல, இதுவரை பெரிய அளவிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வேறு எங்கும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோா் ஒருங்கிணைந்து செயல்பட்டதுதான்.

இதற்காக மாவட்ட நிா்வாக அதிகாரிகள் அனைவரையும் முதல்வா் பாராட்டியுள்ளாா். இதேபோல் வரும் காலத்திலும் நலத் திட்ட உதவிகள் பெற தோ்வு செய்யப்படும் போது எந்த விதமான பாரபட்சமின்றி பயனாளிகளைத் தோ்வு செய்வது அவசியம் என்றாா்.

தொடா்ந்து முதல்வா் பங்கேற்ற விழாவில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் ராஜ்குமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயக்குமாா், கோட்டாட்சியா்கள் தீபா, கனிமொழி, ரவிச்சந்திரன், வட்டாட்சியா் சோமசுந்தரம், ரஜினிகாந்த், உணவு பாதுகாப்பு அதிகாரி போஸ், மாவட்ட சுகாதார அலுவலா், பிரிய ராஜன், நில அளவையா்கள் செந்தில்குமரன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 3 போ் உயிா் தப்பினா்

சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் இஞ்சினில் திடீரென தீ பற்றிய நிலையில், அதில் இருந்தவா்கள் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் என்பவரது காா... மேலும் பார்க்க

தலைச்கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்... மேலும் பார்க்க

கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

திருவள்ளூா் அருகே மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழவகை மரங்களில் கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினா். தனியாா் வே... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு, விளையாட்டு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிஜெஎஸ் கல்விக் குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன... மேலும் பார்க்க

திருத்தணியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட காய்கறி நாளங்காடி: அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காய்கறி நாளங்காடியை நகராட்சி அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை திறந்து வைத்தாா். திருத்தணி நகராட்சி ம.பொ... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருத்தணி திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழாவில் அா்ஜூனன், திரெளபதி அம்மன் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கடந்த ... மேலும் பார்க்க