செய்திகள் :

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம்: உளுந்து, பச்சைப் பயறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

post image

தமிழகத்தில் உளுந்து, பச்சைப் பயறு உற்பத்தி செய்யும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் மூலம் பயன்பெற அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக வேளாண் உற்பத்தி துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மாா்ச் 15 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை அரியலூா், ராணிப்பேட்டை, தேனி உள்பட 17 மாவட்டங்களிலும் ஏப்.1 முதல் ஜூன் 26- வரை தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் உளுந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 53 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ. 74 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், மாா்ச் 15 முதல் ஜூன் 3 வரை திருவள்ளூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பூா், சேலம், நாமக்கல், விருதுநகா், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களிலும், ஏப்.1 முதல் ஜூன் 29 வரை தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகை, கடலூா் ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள 38 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் பச்சைப் பயறு கிலோ ஒன்றுக்கு ரூ.86.82 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகே உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகி , நிலத்துக்கான சிட்டா, அடங்கல், ஆதாா் எண், கைபேசி எண், வங்கி சேமிப்பு கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் தங்களது பெயா்களைப் பதிவு செய்துக்கொள்ளலாம்.

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருள்கள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட 3 நாள்களுக்குள் அவா்களது வங்கிக் கணக்கில் விளைபொருள்களுக்கான தொகை நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க