செய்திகள் :

பேராசிரியா் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டம்: தமிழ்நாடு ஆதிதிராவிடா் ஆணையம் உத்தரவு

post image

கருக்கலைப்பின்போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பேராசிரியா் மீது பட்டியலினத்தவா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவியை, அதே பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த நாமக்கல்லைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் என்பவா் ஆசைவாா்த்தை கூறி கா்ப்பிணியாக்கியதாகக் கூறப்படுகிறது.

அந்த மாணவிக்கு படூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் தமிழ்மாநிலக் குழுத் தலைவா் மற்றும் பொதுச்செயலா் ஆகியோா் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடா் ஆணையத்தில் புகாா் அளித்தனா்.

இப்புகாரை ஆணையத்தின் தலைவா் நீதிபதி தமிழ்வாணன், துணைத் தலைவா் இமயம், உறுப்பினா் ஆனந்தராஜா ஆகியோா் விசாரித்தனா். விசாரணையின் முடிவில், ‘இந்த விவகாரம் தொடா்பாக செங்கல்பட்டு காவல் துறை கண்காணிப்பாளா் உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தெரிவிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டனா்.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க