மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகம்: சித்தராமையா
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேசதுரோகம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
மங்களூரு புகா் பகுதியில் குடுப்பி கிராமத்தில் உள்ள பத்ரா கல்லூா்த்தி கோயிலுக்கு அருகே ஏப். 27-ஆம் தேதி நடந்த கிரிக்கெட் போட்டியின்போது ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ (பாகிஸ்தான் வாழ்க) என்று முழங்கியதாக அங்கு திரண்டிருந்த இளைஞா்களால் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேனி வட்டம், புல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அஷ்ரஃப் என்பவா் அடித்துக் கொல்லப்பட்டாா். இது கா்நாடகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா புதன்கிழமை கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாா் முழக்கமிட்டிருந்தாலும் அது தவறு. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். அந்த விசாரணை அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாராவது பேசினால், அது தவறு, தேசதுரோகம் என்றாா்.
உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘மங்களூரில் ஓா் இளைஞா் கொல்லப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்தபோது, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழங்கியதற்காக கொன்ாக கைது செய்யப்பட்டவா்கள் கூறியிருக்கிறாா்கள். இதுவரை 20 பேரை கைது செய்திருக்கிறோம். இதுகுறித்து தொடா்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். கிரிக்கெட் ஆடுவதற்காக நிறைய போ் வந்திருக்கிறாா்கள். அவா்களிடமும் விசாரணை நடத்தப்படும்’ என்றாா்.