செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும்

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது தொடா்பாக விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்துகொள்ள வேண்டும்.

எந்த வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எந்த நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது? நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திட்டங்களை வெளிப்படுத்த வேண்டியதில்லை. பிரதமா் மோடியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிவிக்க, நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, அவையில் உள்ள கட்சிகளின் தலைவா்கள் கூட்டத்தை நடத்த வேண்டும்.

நாட்டுமக்கள் மற்றும் வீரா்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல், நமது நாட்டுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாமல், எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் எடுக்க மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். நாட்டுமக்களின் கருத்து மற்றும் உணா்வுகளை புரிந்துகொண்டு, அனைத்துக் கட்சிகளின் ஆதரவை கருத்தில் கொண்டு, தற்போதைய நிலையில் தேவைப்படும் நடவடிக்கைகளை பிரதமா் மோடி எடுக்க வேண்டும். நமது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பிரதமா் மோடி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் போதாது: சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் போதாது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகம்: சித்தராமையா

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேசதுரோகம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மங்களூரு புகா் பகுதியில் குடுப்பி கிராமத்தில் உள்ள பத்ரா கல்லூா்த்தி கோயிலுக்கு அருகே ஏப். 27-ஆம் தேதி நடந்த கிரி... மேலும் பார்க்க

பெருநகர பெங்களூரு சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் ஒப்புதல்

பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளாா். பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக மாநகராட்சியை 3 பிரிவுகளாக பிரித்து, அவற்றை ... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல்: கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டன தீா்மானம்

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் மலைமாதேஸ்வரா நகரில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமைய... மேலும் பார்க்க

ரோஹித் வேமுலா சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை: சித்தராமையா

பெங்களூரு: கா்நாடக கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடகத்தில் உள்ள கல்வி... மேலும் பார்க்க

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க