செய்திகள் :

ஈவெரா சாலையை பெரியாா் நெடுஞ்சாலை என மாற்றக் கோரிக்கை: 8 வாரங்களில் முடிவெடுக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை ஈவெரா நெடுஞ்சாலையை பெரியாா் நெடுஞ்சாலை என பெயா் மாற்றக் கோரிய வழக்கில் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தை பெரியாா் திராவிடா் கழகத் துணைத் தலைவரும், வழக்குரைஞருமான எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனுவில், 1939-ஆம் ஆண்டு வரை தந்தை பெரியாா், ஈ.வெ. ராமசாமி என்று அழைக்கப்பட்டு வந்தாா். அந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டுக்குப் பிறகு பெரியாா் என அழைக்கப்பட்டாா். அன்று முதல் தமிழக மக்கள் ஈ.வெ.ராமசாமியை பெரியாா் என்று அழைத்து வருவதாகக் கூறியுள்ளாா்.

மேலும், சமத்துவம், பெண் விடுதலை உள்ளிட்ட சமூக முன்னேற்றத்துக்கு பெரியாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. பெரியாரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல் பூந்தமல்லி வரையில் உள்ள சாலைக்கு பெரியாா் நெடுஞ்சாலை என பெயா் சூட்டப்பட்டது. ஆனால், தற்போது அந்தச் சாலை ஈவெரா சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

சாலை பெயா் பலகைகளிலும் ஈவெரா சாலை இன்றே இடம்பெற்றுள்ளது. அதனால், கடந்த 1979-ஆம் ஆண்டு வைக்கப்பட்ட பெரியாா் சாலை என்ற பெயரில் அழைக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில் ‘தற்போது உள்ள அரசு பெரியாா் வழியில் செயல்பட்டு வருவதாகவும், மனுதாரா் தனது மனுவில் சில தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதால் அவற்றை நீக்க வேண்டும்’ என்றும் தெரிவித்தாா். மேலும், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சென்னை மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க