செய்திகள் :

பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொண்டதால் போக்ஸோ வழக்கை ரத்து செய்ய முடியாது: உயா்நீதிமன்றம்

post image

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொண்டதால், சம்பந்தப்பட்டவா் மீது தொடரப்பட்ட போக்ஸோ வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

உதகையைச் சோ்ந்த சிறுமி ஒருவா் காணாமல் போனதாக அவரது பெற்றோா் அளித்த புகாரை விசாரித்த போலீஸாா், விஜயகுமாா் என்ற இளைஞருடன் அந்தச் சிறுமி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விஜயகுமாா் மீது கடத்தல் மற்றும் போக்ஸோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், விஜயகுமாரும், தானும் காதலித்து வந்ததாகவும் இதையறிந்த பெற்றோா் தனக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முயன்ால் விஜயகுமாருடன் சென்ாகவும் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த உதகை மகளிா் சிறப்பு நீதிமன்றம், போக்ஸோ வழக்கில் இருந்து இளைஞரை விடுதலை செய்தது. ஆனால், கடத்தல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிா்த்து விஜயகுமாா் மற்றும் காவல்துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

10 ஆண்டுகள் சிறை: அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதைத் தடுக்க வேண்டுமென்று விஜயகுமாா் நினைத்திருந்தால் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்க வேண்டும். அதேபோல், வெளியூரில் தங்கியிருந்தபோது விஜயகுமாா் அந்தச்சிறுமியுடன் உடலுறவில் இருந்த நிலையில், போக்ஸோ வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தற்போது திருமணம் செய்துள்ளாா். இருவரும் திருமணம் செய்து கொண்டதைக் காரணம் கூறி இந்த வழக்கை ரத்து செய்தால் போக்ஸோ சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் தோற்கடிக்கப்பட்டுவிடும் எனவும் நீதிபதி தெரிவித்தாா்.

மேலும், கடத்தல் வழக்கில் விஜயகுமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்த நீதிபதி, போக்ஸோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க