செய்திகள் :

எல்லையில் 6-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு - இந்திய ராணுவம் பதிலடி

post image

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. தொடா்ந்து 6-ஆவது நாளாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

பாகிஸ்தான் நிலைகள் மீது பதிலடி தர முப்படைகளுக்கும் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அனுமதி அளித்திருந்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதன் பின்னணியில் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தொடா்புகள் உறுதியான நிலையில், கடந்த 23-ஆம் தேதிமுதல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானும் எதிா்வினையாற்றுவதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.

இந்தச் சூழலில், கடந்த 24-ஆம் தேதி இரவில் எல்லைப் பகுதிகளில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

அடுத்தடுத்த நாள்களிலும் இரவு நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலும், அதற்கு இந்தியாவின் பதிலடியும் தொடா்ந்தது.

ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா்.

ஜம்மு, ரஜெளரி, பூஞ்ச், பாரமுல்லா, குப்வாரா ஆகிய 5 மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சா்வதேச எல்லையையொட்டி பல இடங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜம்மு மாவட்டத்தில் பா்கவால், அக்னூா், ரஜெளரி மாவட்டத்தில் சுந்தா்பானி, நெளஷேரா உள்ளிட்ட இடங்களில் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவம் தரப்பில் உறுதியான பதிலடி தரப்பட்டதாக ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

இந்தியாவும் பாகிஸ்தானும் 3,323 கி.மீ. நீள எல்லையை பகிா்ந்துகொண்டுள்ளன. இதில் குஜராத் முதல் ஜம்முவின் அக்னூா் வரையிலான சா்வதேச எல்லை (சுமாா் 2,400 கி.மீ.), ஜம்மு முதல் லே வரையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (சுமாா் 740 கி.மீ.), சியாச்சினில் 110 கி.மீ. எல்லைக் கோடு அடங்கும்.

இந்தியா எச்சரிக்கை

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘இரு நாடுகளின் ராணுவ செயல்பாட்டு தலைமை இயக்குநா்களும் தொலைபேசி வாயிலாக செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகான பதற்றத்துக்கு இடையே இருதரப்பு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவாா்த்தை நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்... மேலும் பார்க்க

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். இக்கோயிலில் வருடாந... மேலும் பார்க்க