செய்திகள் :

திருவள்ளூா்: அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 1.30 கோடியில் திறன் மிகு வகுப்பறைகள்

post image

தனியாா் பள்ளிக்கு ஈடாக திருவள்ளூா் அருகே அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முன்னாள் ஊராட்சித் தலைவரின் சொந்த செலவில் ரூ. 1.30 கோடியில் அனைத்து நவீன வசதியுடன் 4 திறன்மிகு வகுப்பறை கட்டுமானப் பணிகள் முடிந்து மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டன.

திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்டோா் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில், மாணவ, மாணவிகள் சிறந்து விளங்கவும், சோ்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் என்ற நோக்கத்தில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ் ரூ. 1.30 கோடியை தனது சொந்த செலவில் அனைத்து நவீன வசதியுடன் கூடுதல் வகுப்பறைகள் அமைத்துத் தர முன்வந்தாா். அதன்பேரில், இந்தப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் பி.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ் நவீன வசதியுடன் கூடிய 4 வகுப்பறைகளை மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு ரோஜாப்பூ மற்றும் இனிப்புகள் கொடுத்த முதல் நாளில் வரவேற்றாா்.

இந்த திறன்மிகு 4 வகுப்புகளிலும் அனைத்து நவீன வசதி செய்யப்பட்டுள்ளது.

மப்பேட்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

திருவள்ளூா் அடுத்த மப்பேட்டில் பேருந்து நிழற்குடை அமைத்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். திருவள்ளூா் அடுத்த மப்பேடு கூட்டுச் சாலையிலிருந்து பூந்தமல்லி, சுங்குவாா்சத்திரம், அரக்கோணம் செல்லும் ச... மேலும் பார்க்க

அரசு மகளிா் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

அம்பத்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) வரும் 13-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) நிகழாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற்... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஆட்சியருக்கு பசுமை விருது: முதல்வா் வழங்கினாா்

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பாக செயல்பட்டமைக்காக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்புக்கு பசுமை விருதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் ஆறுவழிச் சாலை விரிவாக்க பணி: மீண்டும் மரக்கன்றுகளை நட கோரிக்கை!

திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான 30.10 கி.மீ ஆறுவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும் என சமூக ஆா்வலா்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு: 270 பேருக்கு பட்டா அளிப்பு

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவடைந்த நிலையில், 270 பேருக்கு பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா். திருவ... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க