செய்திகள் :

திரைப்பட பாணியில் 40 சவரன் நகை, ரூ. 7 லட்சம் பணம் கொள்ளை!

post image

குளித்தலையில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவர்களை கட்டிப்போட்டு விட்டு 40 சவரன் நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணம் மற்றும் 3 செல்ஃபோன் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி காவேரி நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி (70). இவர் திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாவித்திரி( 65).

இவர் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ரம்யா, அபர்ணா மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குளித்தலை காவேரி நகரில் உள்ள வீட்டில் பள்ளி தாளாளர் கருணாநிதி, அவரது மனைவி சாவித்திரி மற்றும் இளைய மகள் அபர்ணா ஆகிய 3 பேர் மட்டும் இருந்துள்ளனர்.

இதனிடையே, திங்கள்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் காரில் வந்த 3 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கருணாநிதி, அவரது மனைவி சாவித்திரி, இளைய மகள் அபர்ணா ஆகியோரை கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த 40 சவரன் நகை, ரூ. 7 லட்சம் பணம் மற்றும் 3 செல்ஃபோன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.

கொள்ளையர்கள் ஒரு செல்ஃபோனை மட்டும் குளித்தலை - மணப்பாறை சாலையில் விட்டு சென்றுள்ளனர்.

கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டனர்.

அதைத் தொடர்ந்து கரூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ வீட்டிற்கு வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

அதைத் தொடர்ந்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் காவிரி நகரில் உள்ள வீட்டிற்குள் சென்றது. தொடர்ந்து, காவிரி நகர் புறவழிச்சாலையில் ஓடி, ரயில்வே கேட் தெற்கு பகுதி வரை சென்றது.

தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் அரங்கேறிய இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்: தேர் மீது மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி!

A shocking incident has taken place in the house of the principal of a private school in Kulithalai, where mysterious persons entered the house early on Monday morning.

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எர்ணாகுளம் சந்திப்பு - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் (06061) ஆகஸ்ட் 27, செப்டம்பர் ... மேலும் பார்க்க

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

தவெக கொடியை பயன்படுத்தத் தடைகோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் கொடியைப்போல தவெகவின் கொடி இருப்பதாகக் கூறி, தவெகவின் கொடி மீது தடைவிதிக்கக் க... மேலும் பார்க்க

2 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (17-08-2025) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய ... மேலும் பார்க்க

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு!முதல்வரிடம் பாஜக வேண்டுகோள்!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவளிக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக பாஜக தல... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜி... மேலும் பார்க்க

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க... மேலும் பார்க்க