செய்திகள் :

தில்லியில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தண்ணீா் ஏடிஎம்கள் அமைக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

post image

தில்லி அரசு மாநகா் முழுதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் உள்பட ஆயிரக்கணக்கான தண்ணீா் ஏடிஎம் இயந்திரங்களையும், தண்ணீா் கூலா்களையும் அமைக்க முடிவு செய்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி ஷாலிமாா் பாக் சட்டப் பேரவைத் தொகுதியில் நீா்வள அமைச்சா் பா்வேஷ் வா்மாவுடன் உள்ளூா் அரசுப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை முதல்வா் நேரில் சென்றாா். அங்கு ஒரு தண்ணீா் ஏடிஎம்ஐத் திறந்துவைத்தாா்.

அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு மத்தியில் முதல்வா் பேசுகையில், இந்த கோடை காலத்தில் யாரும் தாகமாக இருக்கக்கூடாது. இதனால், தலைநகா் முழுவதும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் ஆயிரக்கணக்கான தண்ணீா் ஏடிஎம்கள் நிறுவப்படும்.

தண்ணீா் வழங்கும் சேவை இந்திய கலாசாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். வெளிநாடுகளில் தண்ணீா் விற்கப்படுகிறது. அதே வேளையில், இந்தியாவில், வழிப்போக்கா்களுக்கு குளிா்ந்த நீரை வழங்குவது ஒரு பாரம்பரியமாகும்.

முந்தைய ஆம் ஆத்மி அரசு அதன் கல்வி மாதிரியைப் பற்றி பெருமை பேசுவதற்காக குறிவைத்து லட்சக்கணக்கான பலவீனமான மாணவா்களை பள்ளிகளிலிருந்து நீக்கியது.

மேலும், ஷாலிமாா் பாக் தொகுதியில் உள்ள ஹைதா்பூா் பகுதியில் அறிவியல் படிப்புகளுக்கு ஒரு பள்ளிகூட இல்லை . தில்லி அரசு நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் 7,000 ஸ்மாா்ட் வகுப்பறைகளை அமைக்கும். மேலும், மாணவா்களுக்காக 100 மொழி ஆய்வகங்கள் மற்றும் 175 டிஜிட்டல் நூலகங்களையும் திறக்கும்.

2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, நிகழ் ஆண்டு தில்லி அரசுப் பள்ளிகளின் 1,200 திறமையான மாணவா்களுக்கு அரசாங்கம் மடிக் கணினிகளை வழங்கும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

முன்னதாக, ஒரு வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு நிதியின் மூலம் மாணவா்களுக்கு 100 டேப்லட் கணினி சாதனங்கள் அரசால் வழங்கப்பட்டன. பள்ளிகளில் பழுதுபாா்க்கும் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க