செய்திகள் :

தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன் போராட்டம்!

post image

பஹல்காம் தாக்குதலையடுத்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பல அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சூழ்ந்த இடத்தில் பயங்கரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது நாடு முழுவதுமே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் வரத் தடை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என்று இந்தியா தரப்பில் சில அரசியல் தலைவர்களே கூறி வருகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையே பதட்ட சூழல் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கையில் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நேற்று அறிவிக்கப்பட்டதால், பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கு வந்திருந்த பாகிஸ்தானியர்கள் அட்டாரி - வாகா எல்லையில் குவிந்துள்ளனர்.

இதையும் படிக்க | பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு நிவாரண நிதியுதவி அறிவித்து அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 26 பேரின் குடும்பங்களுக்கும... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜி20 நாடுகளின் தூதரக அதிகாரிளுக்கு மத்திய அரசு விளக்கம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சீனா, கனடா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று விளக்கமளித்தது.ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிக... மேலும் பார்க்க

ரூ.7 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் தம்பதி சரண்!

சத்தீஸ்கரின் கபிர்தம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் தம்பதி சரணடைந்துள்ளனர்.மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தோ... மேலும் பார்க்க

இந்திய வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்தவரான இந்திய பாதுகாப்புப் படை வீரர் பி.க... மேலும் பார்க்க

இந்தியாவுடன் போர்? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திய பாகிஸ்தான்!

பெஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளை போராகக் கருதுவதாக பாகிஸ்தான் கூறுகிறது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பதில் ... மேலும் பார்க்க

இந்தியப் போர்க்கப்பலின் ஏவுகணைச் சோதனை வெற்றி!

இந்தியக் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சூரத் வெற்றிகரமாக ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது.இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சூரத்தின் மூலம் நடத்தப்பட்ட தரையிலிருந்து... மேலும் பார்க்க