செய்திகள் :

தில்லியில் துபை இளவரசர்!

post image

துபை நாட்டு முடி இளவரசர் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

துபையின் முடி இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூம் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று (ஏப்.8) இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று முடி இளவரசராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்தியா வந்த அவரை இன்று தில்லி விமான நிலையத்தில் இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி அரசு மரியாதையுடன் வரவேற்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சருமாக பதவி வகிக்கும் இளவரசர் ஹம்தான் இந்த இரண்டு நாள் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து கலந்து ஆலோசிக்கவுள்ளார்.

இந்நிலையில், இளவரசர் ஹம்தானுடன் ஐக்கிய அரபு அமீரக அரசின் முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு தொழிலதிபர்கள் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் மதிய உணவு விருந்தில் அவர் இன்று (ஏப்.8) கலந்துக்கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தில் தில்லியிலிருந்து மும்பை செல்லும் இளவரசர் ஹம்தான் அங்கு இந்தியா மற்றும் துபையைச் சேர்ந்த தொழிலதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் மூலம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளின் வளர்ச்சியில் இணைந்து செயல்பட வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியின் முடி இளவரசர் காலித் பின் முஹம்மது பின் ஜயத் அல் நஹ்யான் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அதன் பின்னர் தற்போது இளவரசர் ஹம்தானின் பயணமானது இருநாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், துபை இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், இரண்டாவது மிகப் பெரிய ஏற்றுமதி தளமாகவும் பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 8 மாதங்கள் விண்வெளியில்... ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஸ்வாத் மாவட்... மேலும் பார்க்க

முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது கருப்புச் சாயம் பூச்சு!

உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர். காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த முகாலாப் பேரரசின் கட... மேலும் பார்க்க

நேபாளம்: சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயம்!

நேபாளத்தில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்தின் மூலம் நேபாளத்தின் பிரபல சுற்றுலாத் தளமான போகராவிற்கு 25-க்கும் ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் 9 ஒட்டகங்கள் பலி! நெடுஞ்சாலையை முடக்கிய கிராமவாசிகள்!

ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் 9 ஒட்டகங்கள் பலியானதினால் கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலோடியின் போஜஸார் பகுதியில் பரத்மாலா நெடுஞ்சாலையில் நேற்ற... மேலும் பார்க்க

அரிசியால் உண்டாகும் புற்றுநோய்? 2050-க்குள் பாதிப்படையும் இந்தியா?

வரும் 2050-க்குள் ஆசிய நாடுகளில் உற்பத்தியாகும் அரிசியினால் அந்நாடுகளின் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக் கூடும் என அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்... மேலும் பார்க்க

யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்! 58 பேர் பலி!

யேமன் நாட்டின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள ராஸ் இஸா எண்ணெய்த் துறைமுகத்தின் ம... மேலும் பார்க்க