Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
தில்லியில் மேலும் 30 பேருக்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 592-ஆக உயா்வு!
மத்திய சுகாதார அமைச்சகத்தால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, தில்லியில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதைத் தொடா்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 592-ஆக உயா்ந்துள்ளது.
மேலும், ஜனவரி 1 முதல் இறப்புகளின் எண்ணிக்கை ஏழு ஆக உள்ளது. வியாழக்கிழமை முதல் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்தியா முழுவதும் செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,364-ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளம் இந்நோய்த் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அதைத் தொடா்ந்து குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தில்லி ஆகியவை உள்ளன என்று அமைச்சகத் தரவுகள் காட்டுகின்றன.
கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஆக்ஸிஜன், தனிமைப்படுத்தும் படுக்கைகள், வென்டிலேட்டா்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.