செய்திகள் :

தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி நீக்கம்

post image

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இருந்து மனுஸ்மிருதி நீக்கப்படுவதாக பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் மற்றும் திறந்தவெளி பல்கலை படிப்புகள் என எந்த படிப்புகளிலும் மனுஸ்மிருதி கற்பிக்கப்படாது என்பதை தில்லி பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020 இன் ஒரு பகுதியாக, தில்லி பல்கலைக்கழகத்தில் தர்மசாஸ்திர ஆய்வுகள் என்ற புதிய பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதியை முதன்மைப் பாடமாகச் சேர்க்கப்பட்டது. இதில் ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் மற்றும் அர்த்தசாஸ்திரம், போன்ற நூல்களையும் உள்ளடக்கிய வர்ணாசிரமம் மற்றும் சாதி அமைப்பு எவ்வாறு "சமூகத்தை ஒழுங்குபடுத்துகிறது" என்று மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

"நாகரிக சமூக ஒழுங்கை" உருவாக்குவதில் திருமணத்தின் பங்கு மற்றும் ஒழுக்கநெறிகள் தனிப்பட்ட நடத்தையை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பதையும் பாடத்திட்டம் உள்ளடக்கும் என்று தகவல்கள் வெளியானது.

தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து மனுஸ்மிருதி நீக்கம்

கடந்த ஆண்டு, தில்லி பல்கலைக்கழக சட்டப் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களைச் சோ்ப்பது சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு ஆசிரியா்கள் மற்றும் குழுவைச் சாா்ந்த உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அப்போது நீக்கப்பட்டது.

இந்த முறை, சமஸ்கிருத பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் விமர்சனங்கள், எதிா்ப்புகள் எழுந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இருந்து மனுஸ்மிருதி நீக்க முடிவு செய்துள்ளோம் என பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக வியாழக்கிழமை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,

சமஸ்கிருத பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இருந்து மனுஸ்மிருதி நீக்க முடிவு செய்துள்ளோம்.

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் இளங்கலை சமஸ்கிருதம் மற்றும் திறந்தவெளி பல்கலை படிப்புகள் உள்பட எந்த படிப்புகளிலும் மனுஸ்மிருதி கற்பிக்கப்படாது என்பதை தில்லி பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இளங்கலை வரலாற்று (ஹானர்ஸ்) பாடத்தில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘வெட்கக்கேடான நடவடிக்கை’

இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாணவர் குழுவின் தேசியத் தலைவர் வருண் சௌத்ரி, “ தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதியை சேர்ப்பது வெட்கக்கேடானது. இது தலித்துகள், ஏழை எளிய மற்றும் பெண்ககள், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதிய பாகுபாடு மற்றும் அநீதிக்கு அடித்தளமிடுகிறது” என்று கூறினார்.

முன்னதாக, ‘ஏழை எளிய மற்றும் பெண்களின் கல்வி வளா்ச்சிக்கு தடை விதிக்கும் கருத்துகளைக் கொண்ட மனுஸ்மிருதியை பாடங்களில் சோ்ப்பது கண்டனத்துக்குரியது. இது அரசமைப்பின் அடிப்படை விதிகளை மீறும் நடவடிக்கையாகும்’ என அனைத்து தரப்பிலும் விமர்சிக்கப்பட்டது. சமூக ஜனநாயக ஆசிரியா்கள் முன்னணி (எஸ்டிடிஎஃப்) கண்டனம் தெரிவித்ததுடன் போராட்டங்களையும் நடத்தியது. இது பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கவலையடையச் செய்தது.

மனுஸ்மிருதி பாடங்களை உள்ளீடு செய்து அரசமைப்பைச் சீா்குலைக்கும் ஆா்எஸ்எஸின் கொள்கைக்கு பிரதமா் மோடி வடிவம் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த முன்னெடுப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில மற்றும் மாவட்ட அளவில் போராட்டங்களும் நடைபெற்றது.

பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசைவிட மாநில அரசுதான் அதிக நிதி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுக்கிறது என முதல்வர் ம... மேலும் பார்க்க

பாஜகவில் இருந்து கே.ஆர். வெங்கடேஷ் நீக்கம்

தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) அணியின் மாநில செயலாளராக இருந்த கே.ஆர். வெங்கடேஷ் கட்சியில் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு ம... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை உற்சாகமாக் குளித்து மகிழ்ந்தனர்.தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை ... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று(சனிக்கிழமை) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள... மேலும் பார்க்க

ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்கிறார் சுபான்ஷூ சுக்லா

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா் சுக்லா உள்பட நான்கு பேர் குழு, ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும... மேலும் பார்க்க

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை இபிஎஸ் முடிவு செய்வார்: கே. பி. ராமலிங்கம்

சேலம்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் முடிவு செய்வார் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ... மேலும் பார்க்க