செய்திகள் :

தில்லி: 6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு! யார்யார்?

post image

தில்லி அமைச்சரவையில் இடம்பெறவுள்ள 6 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல் முறை சட்டப்பேரவை உறுப்பினா் ரேகா குப்தா இன்று பதவியேற்கவுள்ளாா்.

அவர் தலைமையிலான அமைச்சரவையில் 6 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்பார்கள் என்று பாஜக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 5 பேரின் பெயர்ப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை தோற்கடித்த பா்வேஷ் வா்மா துணை முதல்வராகவும் அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார்.

மேலும், ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தரராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.

இதையும் படிக்க : முதல் பேரவைத் தேர்தலிலேயே முதல்வர் பதவி..! யார் இந்த ரேகா குப்தா?

முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்களுக்கு இன்று துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதையடுத்து, தில்லி ராம்லீலா மைதானத்தில் 25,000 போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

புது தில்லி, பிப்.22: சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது பாஜக வாக்குறுதியளித்தவாறு பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்து விவாதிக்க தில்லி முதல்வரைச் சந்திக்க முன்னாள் முத... மேலும் பார்க்க

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க