செய்திகள் :

திவ்யபாரதியுடன் காதலா... என்ன சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்?!

post image

ஜி.வி.பிரகாஷும் நடிகை திவ்யபாரதியும் தங்களின் உறவு குறித்து முதல்முறையாக மனம்திறந்துள்ளனர்.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்தார். இந்தத் தம்பதி கடந்தாண்டு விவாகரத்து பெற்றது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில் அவர்களது விவாகரத்துக்குக் காரணமாக நடிகை திவ்யபாரதி சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்பட்டார். அவர், ஜி.வி.பிரகாஷ் உடன் டேட்டிங் செல்வதாக செய்திகள் வெளியாகின.

இதையும் படிக்க | ஏகே - 64 இயக்குநர் இவரா?

ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான திவ்யபாரதி, விரைவில் வெளியாகவுள்ள கிங்ஸ்டன் படத்திலும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். பேச்சுலர் படத்தில் இருவரின் காதல் காட்சிகள் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவியது. ஜி.வி. விவாகரத்தை அறிவித்தவுடன் மேலும் அதிகமாக இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷும், திவ்யபாரதியும் தங்கள் இருவரின் உறவு குறித்து முதல்முறையாக வெளியில் பகிர்ந்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய ஜி.வி.பிரகாஷ், ”பேச்சுலர் படத்திற்குப் பிறகு நாங்கள் இருவரும் டேட் செய்வதாக பேசப்பட்டது. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இருவருமே படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே சந்தித்துக் கொள்வோம். நாங்கள் சாதாரண நண்பர்கள் மட்டுமே. இருவரும் வெளியில் எங்கும் சந்தித்துக் கொண்டதில்லை. திரையில் எங்கள் இருவரின் நடிப்பு பேசப்படுவதால் அவ்வாறு மக்கள் நினைக்கலாம். ஆனால், எங்களுக்குள் அப்படியான உறவு எதுவும் இல்லை” என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.

திவ்யபாரதி பேசியபோது, ”ஜி.வி. திருமண வாழ்வு குறித்து என்னிடம் அனைவரும் கேட்பார்கள். நான் அவர்களின் குடும்பத்தைப் பிரித்துவிட்டதாக எனக்கு பெண்கள் பலர் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்பார்கள்.

ஜி.வி. சைந்தவி ஒன்றாக இசைக் கச்சேரியில் பாடியபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இனிமேல் நம்மிடம் இதுகுறித்து யாரும் பேசமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், அதன் பின்னர்தான் என்னிடம் இதுபற்றி அதிகமாக கேள்வி கேட்டனர். அவற்றை ஜி.வி.க்கு அனுப்பி எப்படியெல்லாம் பேசுகிறார்கள் பாருங்கள் என நான் கேட்டால், ‘இவர்கள் இப்படித்தான். விடுங்க பாத்துக்கலாம்’ என்று பதிலளிப்பார். சில நேரங்களில் அவ்வாறு அனைவரும் பேசுவது கஷ்டமாக இருக்கும். ஆனால் மக்கள், மீடியா போன்றவற்றை நாம் கட்டுப்படுத்த முடியாது என்பதால் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.

டிடி நெக்ஸ்ட் லெவல்: முதல் பாடல் ரிலீஸ் தேதி!

நாயகனாக நடிக்க ஆரம்பித்த சந்தானத்திற்கு சில படங்கள் தோல்வியைக் கொடுத்தாலும் தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ், பாரிஸ் ஜெயராஜ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் வசூல் ரீதியாக... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.22-02-2025சனிக்கிழமைமேஷம்:இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்ட... மேலும் பார்க்க

அயா்லாந்தை தோற்கடித்தது இந்தியா

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஹெச்) புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 3-1 கோல் கணக்கில் அயா்லாந்தை வெள்ளிக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் அயா்லாந்துக்காக ஜெரிமி டன்கன் 8-ஆவது நிமிஷத்தி... மேலும் பார்க்க

எலிஸ் பெரி அதிரடி: பெங்களூரு - 167/7

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சோ்த்தது. டாஸ் வென... மேலும் பார்க்க

விண்டேஜ் கார் பேரணி - புகைப்படங்கள்

இந்தியாவில் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் காட்சியைக் கொண்டாடும் வகையில், புதுதில்லி கர்தவ்யா பாதையில் நடைபெற்ற 21வது கன் சல்யூட் விண்டேஜ் கார் அருகில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த கலைஞர்கள்.புதுதி... மேலும் பார்க்க

கணவருடன் மீண்டும் இணையும் நடிகை நிக்கி கல்ராணி!

மரகத நாணயம் 2 ஆம் பாகத்தில் நடிகர் ஆதியின் மனைவி நிக்கி கல்ராணியும் நடிக்கவிருப்பதாக நடிகர் ஆதி கூறியுள்ளார்.நடிகர் ஆதியின் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள சப்தம் திரைப்படம் வருகிற 28 ஆம் தேத... மேலும் பார்க்க