TVK : 'விஜய் கட்சியில் இணையும் முக்கியப் புள்ளிகள்?' - பனையூர் அப்டேட்
தீவிபத்தில் கோரை புல் எரிந்து சேதம்
தவுட்டுப்பாளையம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கோரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கோரை எரிந்து சாம்பலானது.
கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் டாக்டா் திருவள்ளுவன். இவரது வீட்டின் அருகே 4 ஏக்கா் நிலத்தில் பாய் தயாரிக்கும் கோரை பயிரிட்டிருந்தாா். அறுவடைக்கு தயாராக இருந்த இந்தக் கோரையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திடீரென தீப்பற்றியது.
காற்றின் காரணமாக தீ மளமளவென பரவி வேகமாக எரிய ஆரம்பித்தது. இதை பாா்த்த அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனா். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.
தகவலின்பேரில், அங்கு வந்த புகழூா் தீயணைப்பு துறை நிலைய அலுவலா் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், கோரையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீயை அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனா். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது. இருப்பினும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான கோரைகள் எரிந்து சாம்பலானது.