செய்திகள் :

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

post image

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம், தாணேயில் உள்ள டிஎம்சி சட்ட கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய நீதிபதி எஸ்.ஓகா, ‘கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நீதித்துறை தீா்ப்புகள் நாட்டின் பல மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன.

புதிய தொழில்நுட்பங்கள் சட்டப்படிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இப்போது உள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு, சட்டம் படிப்பது மற்றும் ஆராய்வது, அதன் அா்த்தத்தைப் புரிந்துகொள்வது மற்றும் குறுகிய காலத்தில் பல தீா்ப்புகளைப் புரிந்துகொள்வது உள்ளிட்டவை மிகவும் எளிதாகிவிட்டது. மாணவா்கள் இந்தத் தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். செய்தியாள... மேலும் பார்க்க

வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகல்! அபிஷேக் பானர்ஜி சேர்ப்பு!

வெளிநாட்டுக்குச் செல்லும் எம்பிக்கள் குழுவிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகியதாகவும், அவருக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி செல்வார் என்றும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபரேஷ... மேலும் பார்க்க

மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலை... மேலும் பார்க்க

விளையாட்டு வீரர்களுக்குத் தில்லி அரசு உரிய வசதிகள் வழங்கும்: முதல்வர்!

தில்லி விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஜக அரசு வழங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். தல்கடோரா மைதானத்தில் தில்லி விளையாட்டு-2025ஐ முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

இந்தியாவில் 257 பேருக்கு கரோனா! தமிழகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் பாதிப்பு!

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தற்போது சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாகப் பரவி வருகிறது. இந்தி... மேலும் பார்க்க

நீதித்துறை பணிக்கு 3 ஆண்டுகள் வழக்குரைஞர் அனுபவம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நீதித்துறை பணியில்(முன்சீப், மாஜிஸ்திரேட்) விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆ... மேலும் பார்க்க