செய்திகள் :

துணை ஜனாதிபதி கோவை வருகை: போலீஸ் பாதுகாப்பை மீறி பைக்கில் வேகமாக சென்றது ஏன்? - இளைஞர் சொன்ன காரணம்

post image

சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை வந்திருந்தார். காலை கொடிசியாவில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், மதியம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவரின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 1,800 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

மாநகராட்சி அலுவலகம் உள்ள டவுன் ஹால் பகுதியிலும், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சி.பி.ராதாகிருஷ்ணன் மதியம் 2.30 மணியளவில் அங்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் அங்கு ஒருவழிப் பாதையில், இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு அதிவேகமாக வந்தனர்.

காவல்துறையினர் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் அவர்கள் நிற்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிசிடிவி

“காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை.” என்று பாஜக-வினர் கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். “இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க” வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

“எனக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை. கோவை மக்கள் தான் என் பாதுகாப்பு” என்று சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

காவல்துறை விளக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “TN66 AQ 4740 என்கிற வண்டியில் பயணித்த இருவர் காவல்துறை எச்சரிக்கையை மீறி அதிவேகமாக சென்றுவிட்டனர். விசாரணையில் அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.” என்று கூறியுள்ளனர்.

இளைஞர் பேசும் வீடியோ
இளைஞர் பேசும் வீடியோ

இளைஞர் சொன்ன காரணம்

மேலும் அந்த வாகனத்தை ஓட்டிய நபர் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் அந்த நபர், “மதுபோதையில் இருந்ததால் காவல்துறையினர் அபராதம் போட்டுவிடுவார்கள் என்று வேகமாக சென்று பிறகு கீழே விழுந்துவிட்டோம்.” என்று கூறியுள்ளார்.

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. ... மேலும் பார்க்க

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கல... மேலும் பார்க்க