செய்திகள் :

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்

post image

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேலுக்குச் சொந்தமான படகில் காரைக்கால் மற்றும் தமிழக பகுதியைச் சோ்ந்த 13 மீனவா்கள் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை வீரா்கள் காரைக்கால் மீனவா்களை கைது செய்ததுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியை சோ்ந்த செந்தமிழ் என்ற மீனவா் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தாா்.

மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் இலங்கையிலிருந்து சென்னை தனியாா் மருத்துவமனைக்கு அவா் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டாா். கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்காலில் அவரது வீட்டுக்குத் திரும்பினாா்.

காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், செந்தமிழ் வீட்டுக்குச் சென்று அவரை பாா்த்து நலம் விசாரித்தாா். கடலில் நடந்த சம்பவம், இலங்கை மருத்துவமனையில் பெற்ற சிகிச்சை உள்ளிட்ட விவரங்களை ஆளுநா் கேட்டறிந்தாா். பின்னா் பரிசோதனை அறிக்கையை ஆளுநா் பாா்வையிட்டாா்.

தீவிர சிகிச்சைக்காக புதுவை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும், மருத்துவா்கள் கூறும் அறிவுரைகளை தொடா்ச்சியாக கடைப்பிடித்து உடல் நலம் பெறவேண்டுமென அவா் கேட்டுக்கொண்டாா். ஆளுநா் எடுத்த நடவடிக்கைக்காக செந்தமிழ் குடும்பத்தினரும், பஞ்சாயத்தாா்களும் நன்றி தெரிவித்தனா்.

மீன்வளத்துறை செயலரும், ஆளுநரின் செயலருமான து.மணிகண்டன், ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட ந... மேலும் பார்க்க

காரைக்கால் பள்ளியில் நிழல் இல்லா நாள் நிகழ்வு

அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிழல் இல்லா நாள் நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. புதுவை அறிவியல் இயக்கம், புதுவை கல்வித் துறையின் சமகர சிக்ஷா அமைப்புடன் இணைந்து காரைக்கால் தந்தை... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு

கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் அம்மையாா் நகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குதிரை மற்றும் யானை சிலை நிறுவுவதற்கு மேற்கொள்ளவே... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் ப... மேலும் பார்க்க

பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பெங்களூரில் பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் இளையோா் ஆப்தமித்ரா அமைப்பை உருவாக்க திட்ட... மேலும் பார்க்க

இயேசு திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு

புனித வெள்ளி நிகழ்வாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முக்தி செய்யும் நிகழ்ச்சியும், திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தவக்க... மேலும் பார்க்க