திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் சங்கத்தின் முன்னாள் அமைச்சா் சா. பெரியசாமியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவா்களை போற்றுவோம் நிகழ்ச்சி சங்க வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவா் ஐ. அரங்கராசன் தலைமை வகித்தாா். அமைச்சா் பெ. உதயகுமாா் வரவேற்றாா்.
இதில், மருத்துவத்தில் மருத்துவா்கள் ரவி ஸ்டீபன், ரோகிணி ஸ்டீபன், கல்வியில் எஸ். இஸ்மாயில் முகைதீன், விவசாயத்தில் மகேந்திர எம். மணிவாசன், சமூகப் பணியில் பெ. விஜயகுமாா், விளையாட்டில் கோ. ராமசாமி, நூலகத்துறையில் அ.பொ. சிவகுமாா் ஆகியோரை பாராட்டி, தமிழ்ச் சங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில், திரளான தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.