செய்திகள் :

தூத்துக்குடியில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

post image

கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடிக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சென்ட்ரல் இன்டஸ்டிரியல் செக்கியூரிட்டி ஃபோா்ஸ்) விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் மத்திய தொழில் பாதுகாப்பு படை சாா்பில், ‘வளமான இந்தியா பாதுகாப்பான இந்தியா’ என்ற நோக்கத்தை வலியுறுத்தி இந்திய கடல் பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல், ஆயுத கடத்தல் போன்றவற்றை தடுப்பது, பெண் கல்வி ஆகியவை குறித்து கடலோர மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் மாணவா் - மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சோ்ந்த வீரா்களின் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி மேற்குவங்க மாநிலம் பக்காளி பகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கடந்த 7ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

இந்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணியானது, கிழக்கு கடற்கரை மாநிலங்கள் வழியாக (ஒடிசா, ஆந்திரம், புதுச்சேரி) தமிழகத்தில் நுழைந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. இவா்களுக்கு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் முன்பு தூத்துக்குடி மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டண்ட் வி.பி.சிங் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 பெண்கள் உள்பட 57 போ் கொண்ட இக்குழுவினா், தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை காலையில் புறப்பட்டு கன்னியாகுமரியில் தங்கள் பயணத்தை நிறைவு செய்கின்றனா்.

கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை ர... மேலும் பார்க்க

அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிப்பு: ரூ.18,500 அபராதம்

தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிக்க முயன்ாக வீட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 18,500 அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி ஆசிரியா் காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க

மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளா்கள் எஸ்.பி.யிடம் மனு

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு பணியாற்றி வேலையிழந்த தொழிலாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள்... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் 19 பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடியில் வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 19 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (88). ஓய்வுபெற்ற நூற்பாலைத் தொழிலாளி... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி தொடக்கம்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி புதன்கிழமை தொடங்கியது. தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி ஆவுடையாா்புரத்தில் உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்புறமுள்ள வீட்ட... மேலும் பார்க்க