"அதிமுக - பாஜக-வுக்கு அதிகாரம் கொடுத்தால், அந்த சாரை கண்டுபிடித்து விடுவோம்" - ...
தூத்துக்குடியில் தொழிலாளி மா்ம மரணம்
தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி தலையில் காயத்துடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையோரம் தலையில் காயத்துடன் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக சிப்காட் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டதாம். அதன்பேரில், போலீஸாா்அந்தச் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப்பதிந்து விசாரித்ததில் அவா், கோவில்பட்டியைச் சோ்ந்த முருகன் (50); கட்டடத் தொழிலாளியான இவா் எட்டயபுரம் சாலை அருகே தங்கியிருந்து வேலை செய்துவந்தது கிடந்ததும் தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.