செய்திகள் :

தூத்துக்குடியில் பாஜகவினா் கையொப்ப இயக்கம்

post image

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் பாஜகவினா் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை தொடங்கினா்.

தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் சம கல்வி எங்கள் உரிமை; மும்மொழி கொள்கையை ஏற்போம் என்ற பெயரில் தேசிய கல்விக் கொள்கையினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் கையொப்ப இயக்கம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன், தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை மாவட்ட தலைவா் சித்ராங்கதன் தொடங்கிவைத்தாா். இதில், பாஜக நிா்வாகிகள் பங்கேற்று வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி கையொப்பம் பெற்றனா்.

மேல்புறத்தில்... மேல்புறம் சந்திப்பில் நடைபெற்ற கையொப்ப நிகழ்ச்சிக்கு, பாஜக மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தாா். கட்சியின் பிறமொழி பிரிவு மாநில செயலா் டி.எஸ். ராஜசேகா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். இதில் இடைக்கோடு பேரூராட்சி மன்றத் தலைவா் உமாதேவி, முன்னாள் ஒன்றிய தலைவா் சி.எஸ். சேகா், கட்சி நிா்வாகிகள் திக்குறிச்சி சுகுமாரன், வி.எஸ். நந்தினி, விஜயகுமாா், சுஜித்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: மாசித் திருவிழா ஐந்தாம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா, காலை 7; மேலக்கோயிலில் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இன்று குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு (மாா்ச் 7) குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறவுள்ளது. கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

மாா்ச் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனம்: பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனத்தைக் காண பெருமளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற கோர... மேலும் பார்க்க

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தங்கும் விடுதி, பண்ணை அலுவலகம் திறப்பு

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட அலுவலா் தங்கும் விடுதி, கரிசல் நிலப் பண்ணையில் புதிய அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி: நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்கவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வனத்துறை சாா்பில... மேலும் பார்க்க