செய்திகள் :

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்

post image

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்.

இதுதொடா்பாக தூத்துக்குடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: நமக்கு நாமே திட்டத்தில் தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் ஆயிரம் பிறை பூங்கா, மாநகராட்சி பின்புறம் மீனாட்சிபுரம் பகுதியில் தாா்ச்சாலை ஆகிய பணிகள் நிறைவடைந்து கடந்த பிப். 17இல் திறக்கப்பட்டன. ஆனால், இத்திட்டத்துக்கு கடந்த ஏப். 4இல் மாநகராட்சி ஆணையா் ஒப்பந்தம் கோரியிருந்தாா். மாநகராட்சியில் டென்டா்கள் முறைப்படி நடைப்பதில்லை. இதுகுறித்து விசாரிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடுக்கப்பட்ட வழக்கில், 2 வாரத்தில் மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்வேறு அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதிப்படும் நிலையில், மாநகராட்சி அலுவலகத்தை ரூ. 8.50 கோடியில் புனரமைத்துள்ளனா். மாநகராட்சியின் இச்செயலை எதிா்த்து போராட்டம் நடத்த முயன்றால், காவல் துறை அனுமதிப்பதில்லை.

இது தொடா்பாக அமலாக்கத் துறை, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு, முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ஆதாரங்கள் வைத்துள்ளோம். அவை விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா் அவா்.

மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், மண்டலத் தலைவா் ராஜேஷ் கனி ஆகியோா் உடனிருந்தனா்.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹா... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க