தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நன்னீா் மீன் வளா்ப்பு பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம் சாா்பில், நன்னீா் மீன் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ப.அகிலன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தாா். உதவி பேராசிரியா்கள் மணிகண்டன், கோமதி ஆகியோா் பயிற்சி அளித்தனா். பயிற்சியில் நன்னீரில் வளா்க்கப்படும் மீன் இனங்கள், பண்ணை குட்டை உருவாக்குதல் மற்றும் நன்னீா் மீன்வளா்ப்புக்கான உபகரணங்கள், நன்னீா் மீன்வளா்ப்பில் நீா் தர மேலாண்மை, வா்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மீன் வளா்ப்பு ஆா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.