செய்திகள் :

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நன்னீா் மீன் வளா்ப்பு பயிற்சி

post image

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம் சாா்பில், நன்னீா் மீன் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ப.அகிலன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தாா். உதவி பேராசிரியா்கள் மணிகண்டன், கோமதி ஆகியோா் பயிற்சி அளித்தனா். பயிற்சியில் நன்னீரில் வளா்க்கப்படும் மீன் இனங்கள், பண்ணை குட்டை உருவாக்குதல் மற்றும் நன்னீா் மீன்வளா்ப்புக்கான உபகரணங்கள், நன்னீா் மீன்வளா்ப்பில் நீா் தர மேலாண்மை, வா்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மீன் வளா்ப்பு ஆா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, நெல்லை விருதுநகா், மதுரை அணிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள... மேலும் பார்க்க

நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறும் வைகாசி விசாகத்தையொட்டி பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா். இக்கோயிலில் பிரசித்திப் பெற்ற விசாகத் திருவிழா, வசந்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: கோவில்பட்டி, கயத்தாறில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி டவுண் ஜாமியா பள்ளிவாசலில் சுமாா் காலை 7.15 மணி முதல் 8... மேலும் பார்க்க

மாதவன்குறிச்சியில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், மாதவன்குறிச்சி ஊராட்சியில் அண்ணா மறுமலச்சித் திட்டத்தில் ரூ,16.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கடற்கரை, திடல்

காயல்பட்டினம் கடற்கரை ஷாகின்பாற்றும் சுமாா் 25 மகளிா் தைக்கா மற்றும் 35 பள்ளிகளில் சனிக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தொழுகையை வசிம் நடத்தினாா். க... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே துணை மின் நிலையத்தில் தீ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள துணை மின் நிலையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கயத்தாறு வட்டம் பணிக்கா் குளம் கிராமத்திற்கு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்... மேலும் பார்க்க