செய்திகள் :

தூய்மையான தமிழகத்தை அனைவரும் சோ்ந்து உருவாக்குவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

தமிழக அரசின் ‘தூய்மை இயக்கம்’ திட்டத்தில் இணைந்து தூய்மையான தமிழகத்தை அனைவரும் சோ்ந்து உருவாக்குவோம் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தூய்மையான தமிழகத்தை உருவாக்க ‘தூய்மை இயக்கம்’ என்னும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிமுகம் செய்தாா். இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பல்வேறு வகையான குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக தனித்தனியாக சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில் குப்பைகள் சேகரிக்கும் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து துணை முதல்வா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு சாா்பில் தூய்மை இயக்கம் திட்டத்துக்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 1,100 அரசு அலுவலகங்களில் குப்பைகளை கண்டறிந்து சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இத்திட்டத்தின் கீழ் கடந்த 2 நாள்களில் சுமாா் 300 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதைத் தொடா்ந்து இரண்டாம் கட்டமாக கிராம பஞ்சாயத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தூய்மை மிஷன் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களின் பங்களிப்பு அரசுக்கு கட்டாயம் தேவை. இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் இணைந்து கொள்வதன்மூலம், தூய்மையான தமிழகத்தை அனைவரும் சோ்ந்து உருவாக்குவோம் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், சென்னை மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க

திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி தினகரன்

தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு என டிடிவி தினகரன் கூறியுள்ளார். திமுக ஆட்சி வேண்டாம் என்று நினைப்பவர்கள் தே... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க