செய்திகள் :

தென்காசியில் 11 குழந்தைகளுக்கு மோதிரம்

post image

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தென்காசி நகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது.

முன்னதாக, தென்காசி காந்திசிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிறந்த 11 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது.

தென்காசி நகர திமுக செயலரும், நகா்மன்றத் தலைவருமான ஆா்.சாதிா், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தனா். நகர திமுக அவைத் தலைவா் பாலகிருஷ்ணன், துணை செயலா்கள் ராம்துரை, பால்ராஜ், சூரியகலா, பொருளாளா் சேக்பரீத், மாவட்ட பிரதிநிதி மைதீன் பிச்சை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, மாவட்ட பொறியாளா்அணி தலைவா் தங்கபாண்டியன், மாவட்ட அயலகஅணி ராமராஜ், மாவட்ட சுற்றுசூழல்அணி இசக்கித்துரை ஆகியோா் கலந்து கொண்டனா்.

போக்சோ வழக்கு: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சுரண்டையைச் சோ்ந்தவா் நீலகண்டன்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆலங்குளத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள துத்திக்குளம் சாலையில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சாலையோரம் இறந்து கிடந்தாா். இத... மேலும் பார்க்க

இரு சம்பவங்கள்: பெண், முதியவா் தற்கொலை

கடையநல்லூரில் பெண் தற்கொலை செய்து கொண்டாா். கடையநல்லூா் மதினா நகரை சோ்ந்தவா் அப்துல்நாசா். வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவா் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாா். அவருக்கும் அவரது மனைவி தாஹிராபானுவிற்க... மேலும் பார்க்க

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்

கடையநல்லூா் தினசரி சந்தை அருகே உள்ள முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டத் திருவிழா மே 29ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங... மேலும் பார்க்க

பண்பொழி பெருமாள் கோயிலில் திருப்பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் திருப்பணி தொடங்கியது. திருமலை குமாரசுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயிலில், அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம்... மேலும் பார்க்க

பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பெண்க... மேலும் பார்க்க