செய்திகள் :

தென்காசி: காதலுடன் சென்ற சிறுமி விபத்தில் பலி; உறவினர்கள் போராட்டம்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

post image

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் என்பவரது 16 வயது மகள் பதினோராம் வகுப்பு படித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மரத்தொழில் செய்து வந்த ரமேஷ் என்ற இளைஞரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அக்டோபர் 5ஆம் தேதி அன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ரமேஷ் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்து இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

ரமேஷ் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் தற்போது விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்பவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற காதலன் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த சிறுமியின் உறவினர்கள் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

மும்பை: பாலத்தின் தடுப்பை உடைத்து கடலுக்குள் பாய்ந்த கார்; குடிபோதையில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையையொட்டி கடற்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கடலில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்தக் கடல் பாலத்தில் பதிவாலா ... மேலும் பார்க்க

சேலம்: சாலையைக் கடக்க முயன்ற தலைமைக் காவலர்; லாரி மோதி பலியான சோகம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (40) என்பவர் சேலம் மாநகர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள்... மேலும் பார்க்க

``உங்க பணம், 1 ரூபாய் கூட குறையாது'' - விபத்தில் சிக்கியவர் குடும்பத்தை நெகிழ வைத்த டி.எஸ்.பி!

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (44). இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் சந்திராவுடன் வசித்து வருகிறார். ராஜாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தனக்க... மேலும் பார்க்க

``சாப்பிட வந்தபோது என் தாயை இழந்துவிட்டேன்'' - ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை தீவிபத்து; 8 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தீவிபத்து ஏற்... மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து - பதறிய மக்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மயிலாடுதுறை கிராமத்தில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீப... மேலும் பார்க்க

விழுப்புரம்: நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்… மூன்று இளைஞர்கள் உயிரிழந்த பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த அஜீஸ் என்ற 25 வயது இளைஞர், பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆயுத பூஜைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையில் கேரளாவுக்குச் செல்ல முடிவெடுத்த அஜீஸ், சென்ன... மேலும் பார்க்க