செய்திகள் :

தென்காசி: சுகாதாரத்துறை அமைச்சர் நிகழ்ச்சிக்கு கட்டாய பணம் வசூலா? - ஆடியோவால் கிளம்பிய சர்ச்சை!

post image

தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக மருத்துவர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை மறுத்துள்ள மாவட்ட சுகாதார அலுவலகம், ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளது. தென்காசி மாவட்டம், இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்தநிலையில், இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட மருத்துவ வட்டாரத்தில் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்படுவதாக வட்டார மருத்துவ அலுவலர் ஒருவர் மூத்த மருத்துவருக்கு பேசுவது போன்ற குரல் பதிவு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த குரல் பதிவில், 'அமைச்சர் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் ரூ.10 ஆயிரம் வேண்டும் என்று சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் கேட்கின்றனர். இந்த தொகையை எப்படி கொடுக்க முடியும் என்று கேட்டால் புதிதாக பணி நியமனம் பெற்றவர்களிடம் வாங்க சொல்கிறார்கள். பணம் வாங்காமல் கவுன்சலிங் மூலம் இடமாறுதல் வழங்குவதால் அதை சுட்டிக்காட்டி பணம் கேட்க சொல்கிறார்கள். அவர்களிடம் எப்படி பணம் கேட்க முடியும்? ஏன் வேலை பார்க்கிறோம் என்ற மன அழுத்தம் ஏற்படுகிறது. அமைச்சர் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் 100 பேரை அழைத்து வரச்சொல்கிறார்கள்.

அன்றைய தினம் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல பலர் விடுமுறை கேட்கிறார்கள். வருடம் முழுவதும் விடுமுறையின்றி வேலை பார்ப்பவர்களை எப்படி கட்டாயப்படுத்தி விழாவுக்கு அழைத்து வர முடியும்?. இது அமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை?. வி.எச்.என். ஆயா வேலை பார்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் சம்பளம் வழங்குவதற்கு கூட மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணமில்லை. இந்தநிலையில் இவர்கள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்க சொல்வது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் குரல் பதிவு ஆடியோ உள்ளது.

வட்டார மருத்துவ அலுவலரின் இந்த குரல் பதிவு, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தென்காசி மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தனிடம் கேட்டபோது, ''அமைச்சர் நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பணம் எதுவும் கேட்கவில்லை. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வட்டார மருத்துவர்கள் யாரும் அந்த ஆடியோ குரல் பதிவை வெளியிடவில்லை. ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்'' என்றார்.

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்... மேலும் பார்க்க

`Wifi முதல் மின்சார உற்பத்திவரை' - இந்தியாவின் முதல்`Smart Village' இப்போது எப்படி இருக்கிறது?

``காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்... அவர் என்கிட்ட வந்து 'என்னப்பா உன் புள்ளை என்கிட்ட கேள்விலாம் கேக்குறான்... என்னனு கவனிக்க மாட்டியானு' மொறக்கிறாரு..." என ... மேலும் பார்க்க