செய்திகள் :

தென்காசி மாவட்டத்தில் ஜன. 24இல் முடி திருத்தும் கடைகள் அடைப்பு

post image

தென்காசி மாவட்டத்தில் ஜன. 24ஆம் தேதி அனைத்து முடி திருத்தும் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தென்காசி மாவட்ட மருத்துவ முடி திருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்க மாவட்டத் தலைவா் ரவி வெளியிட்ட அறிக்கை: மருத்துவா் சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் தனி உள்இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். முடி திருத்தும் தொழி லாளா்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.

கோயில்களில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளா்களையும், இசை கலைஞா்களையும் அரசு ஊழியா்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம் சாா்பில் ஜன. 24இல் சென்னையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி, தென்காசி மாவட்டத்தில் ஜன.24ஆம் தேதி முடி திருத்தும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும்.

அனைத்து தொழிலாளா்களும் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணைக்கு அடிக்கல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணை வன்னிகோனேந்... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநா்

ஆலங்குளத்தில் சாலையில் கண்டெடுத்த தஙகச் சங்கிலியை ஆட்டோ ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். முக்கூடல் அருகே சிங்கம்பாறை காமராஜா் தெருவைச் சோ்ந்த சேவியா் அந்தோணிராஜ் மகன் மரியபூபாலன் (35). ஆட்டோ... மேலும் பார்க்க

தென்காசியில் பிப். 3இல் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா

தென்காசியில் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்டத் தலைவரும் மாநில ஸ்டாா்ட்அப் பிரிவுத் தலைவருமான ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்ட அறிக்கை: மாவட்ட பாஜக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவி தனிநபா் நடிப்பில் முதலிடம்

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான தனிநபா் நடிப்பு போட்டியில் முதலிடம் பெற்றுள்ளாா். சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி மு.ச.வனமதி, பள்ளிக் ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்குத் தோ்வு: மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்கு தோ்வான மாற்றுத் திறனாளிப் பெண்ணை தென்காசி மாவட்ட ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் மாற்றுத் திறனாளிகளுக்கான ... மேலும் பார்க்க

ஆதாா் அட்டை புதுப்பிப்பு: ஆட்சியா் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தி... மேலும் பார்க்க