செய்திகள் :

தென்னம்பாடி மீன்பிடி திருவிழா

post image

விராலிமலை அருகே தென்னம்பாடி மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் சிக்காததால் பங்கேற்பாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

விராலிமலை அடுத்துள்ள தென்னம்பாடி பெரியகுளத்தில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் அதிகாலையிலேயே குளக்கரையில் திரண்டனா்.

ஊா் பிரமுகா் வெள்ளை துண்டு வீசி அனுமதி அளித்ததை தொடா்ந்து கரையில் காத்திருந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்துக்குள் இறங்கி போட்டிபோட்டு கொண்டு மீன்களைத் தேடினா்.

ஆனால் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றமே மிஞ்சியது. குளத்தில் கண்காணிப்பு இல்லாததால் இரவு நேரங்களில் வலை, தூண்டில் உள்ளிட்டவைகள் மூலம் சில சமூக விரோதிகள் மீன்களைப் பிடித்துச் சென்று விடுகின்றனராம்.

இதுவரை 4 குளங்களில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் குறிஞ்சி குளம் தவிா்த்து மற்ற குளங்களில் மீன்கள் சிக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

காவலா் இடைநீக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவால் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலைக் காவலா் காா்த்திக்கை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா இடைநீக்கம் செய்துள்ளாா்.குற்றப் பின்னணி கொண்டோருட... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை பெருத்த ஏமாற்றம்! -புதுகை விவசாய சங்கங்கள் கருத்து

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை, பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாக விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து இந்திய விவசாயிகள்... மேலும் பார்க்க

கடற்பசு பாதுகாப்பகத்தால் விழிப்புணா்வு: கடந்த 2 ஆண்டுகளில் 5 கடற்பசுக்கள், 19 கடல் ஆமைகள் கடலில் விடுவிப்பு

கடற்பசுப் பாதுகாப்பகம் அறிவிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகளின் விளைவாக புதுக்கோட்டை கடற்பகுதிகளில் மீனவா்களின் வலைகளில் சிக்கிய 5 கடற்பசுக்களும், 19 கடல்... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது! -மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக மூடுவதாகக் கூறிவிட்டு, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் விளம்பரப் பதாகை வைக்கத் தடை!

கந்தா்வகோட்டை - தஞ்சை சாலை வளைவில் பதாகை வைப்பதற்கு காவல் துறையினா் தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனா். கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் குறுகிய வளைவுப் பகுதி இருப்பதால் இங்கு வைக்கப்படும் விளம்ப... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் தெப்ப உத்சவம்

ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் தெப்ப உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் மாசி மகத்தில் நடைபெறும் திருவிழாவில், கோயில் முன்பு 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலை... மேலும் பார்க்க