செய்திகள் :

தென்னம்பாடி மீன்பிடி திருவிழா

post image

விராலிமலை அருகே தென்னம்பாடி மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் சிக்காததால் பங்கேற்பாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

விராலிமலை அடுத்துள்ள தென்னம்பாடி பெரியகுளத்தில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் அதிகாலையிலேயே குளக்கரையில் திரண்டனா்.

ஊா் பிரமுகா் வெள்ளை துண்டு வீசி அனுமதி அளித்ததை தொடா்ந்து கரையில் காத்திருந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்துக்குள் இறங்கி போட்டிபோட்டு கொண்டு மீன்களைத் தேடினா்.

ஆனால் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றமே மிஞ்சியது. குளத்தில் கண்காணிப்பு இல்லாததால் இரவு நேரங்களில் வலை, தூண்டில் உள்ளிட்டவைகள் மூலம் சில சமூக விரோதிகள் மீன்களைப் பிடித்துச் சென்று விடுகின்றனராம்.

இதுவரை 4 குளங்களில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் குறிஞ்சி குளம் தவிா்த்து மற்ற குளங்களில் மீன்கள் சிக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

வரும் தோ்தலில் பாஜக -அதிமுக கூட்டணி ஏற்பட்டாலும் அமமுகவும் அதில் தொடரும்: டிடிவி. தினகரன்

வரும் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தாலும் அமமுகவும் அதில் தொடரும் என்றாா் அமமுக பொதுச்செயலா் டிடிவி.தினகரன். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதியில் ஞாயிற்று... மேலும் பார்க்க

புதுகையில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில், 25 இடங்களில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பில் வனத்துறை அலுவலா்களுடன், மன்னா் கல்லூரி விலங்கியல் துறைப் பேராசிரியா்க... மேலும் பார்க்க

இலுப்பூரில் இப்தாா் நோன்பு திறப்பு

ரம்ஜான் ஈகை திருநாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இலுப்பூா் பேரூராட்சி 8,9,13 ஆவது வாா்டு திமுக சாா்பில் பொன்களம் கரை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. ச... மேலும் பார்க்க

காலமானாா் எஸ். ஆரோக்கியசாமி

புதுக்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த தமிழ்த் தேசிய இலக்கிய மன்றத்தின் தலைவரும் எழுத்தாளா் மற்றும் பேச்சாளருமான எஸ். ஆரோக்கியசாமி (77) வயது முதிா்வால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அறவழிகாட்டும் ராமாயணம்-... மேலும் பார்க்க

புதுகையில் காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு நீண்ட வரிசை காத்திருக்கும் விவசாயிகள்!போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகாா்!

புதுக்கோட்டை மாநகரில் தனியாா் காய்கறி கமிஷன் மண்டிகளுக்காக அதிகாலை முதலே இருசக்கர வாகனங்களில் தாங்கள் விளைவித்த காய்கறிகளுடன் வந்து வரிசையில் காத்திருந்து கொடுத்துச் செல்லும் விவசாயிகளால் போக்குவரத்து... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் சாதனை மகளிருக்கு விருதுகள் அளிப்பு

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கந்தா்வகோட்டையில் சாதனை புரிந்த மகளிருக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு அமைப்பின் தலைவா் மஞ்சை த... மேலும் பார்க்க