செய்திகள் :

தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கிய இங்கிலாந்து வீரர்!

post image

இங்கிலாந்தின் முன்னாள் வீரர் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கியது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் நாளை (ஜூன் 11) லண்டனில் மோதுகிறது.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்த அதன் பரம எதிரியான இங்கிலாந்தின் உதவியை தெ.ஆ. அணி நாடியுள்ளது.

குறிப்பாக, லண்டனில் நடைபெறுவதால் ஆஸி.யை அதிகமாக விக்கெட்டுகள் எடுத்த ஸ்டீவர்ட் பிராட்டிடம் உதவியை நாடியுள்ளார்கள்.

சமீபத்தில் தெ.ஆ. அணிக்கு பயிற்சியாளராக பிராட்டை அணுகியபோது அவர் அதனை மறுத்துவிட்டார். மாறாக, இறுதிப் போட்டிக்கு முன்பாக சில அறிவுரைகளை மட்டும் வழங்குவதாக ஒப்புக்கொண்டதாக பேட்டி அளித்திருந்தார்.

ஸ்டீவர்ட் பிராட் சொன்னதுபோலவே, போட்டிக்கு முன்பாக தெ.ஆ. பந்துவீச்சாளர்களிடம் நீண்டநேரம் உரையாடினார்.

குறிப்பாக, எப்படி பந்துவீச வேண்டும்? எங்கு ஃபீல்டிங்கை நிறுத்த வேண்டும் எனக் கூறிவேன் என அவர் முன்பே பேட்டியில் தெரிவித்திருந்தார்.

முதன்முதலாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள தெ.அணி அதனை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போ... மேலும் பார்க்க

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ்..!

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள்... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வெ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார். டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல... மேலும் பார்க்க