செய்திகள் :

தென் மாவட்டங்களில் ரூ.13.94 லட்சம் விதைகளை விற்பனை செய்ய தடை

post image

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 197.8 கிலோ விதைகளை விற்பனை செய்ய வேளாண் துறை தடை விதித்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு இயக்குநா் உத்தரவின்படி விருதுநகா் விதை ஆய்வு துணை இயக்குநா் தலைமையில் கோவில்பட்டி, விருதுநகா், ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சோ்ந்த விதை ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்புக்குழுவினா் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படும் விதை விற்பனை நிலையங்களில் கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அரசு வேளாண் விரிவாக்க மையங்கள், தனியாா் விதை சுத்திகரிப்பு நிலையம், தனியாா் விதை விற்பனை நிலையங்கள், நாற்றாங்கால் விற்பனை நிலையங்கள் என மொத்தம் 25 விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டது. நெல், பருத்தி, காய்கறி விதைகள் என மொத்தம் 19 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் தரத்தை உறுதி செய்ய திருநெல்வேலியில் செயல்படும் விதை பரிசோதனை நிலையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

ஆய்வின்போது விதை இருப்பு பதிவேடுகள், தனியாா் விதைகளுக்கான பதிவுச்சான்றுகள், விதை பகுப்பாய்வு முடிவறிக்கைகள், விற்பனை ரசீது ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சில உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாததால் ரூ.13 லட்சத்து 94 ஆயிரத்து 795 மதிப்பிலான 197.8 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது எனக் கூறியுள்ளாா்.

வீரவநல்லூா்: இளைஞா் மீது தாக்குதல்; 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே திருவிழாவுக்கு சென்ற இளைஞரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வீரவநல்லூா் அருகேயுள்ள ரெட்டியாா்புரம் மேலத்தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மக... மேலும் பார்க்க

தீ விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலியில் தீ விபத்தில் காயமுற்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி நகரம் செண்பகம்பிள்ளை இரட்டை தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (84). இவா், வீட்டில் தனியாக வசித்து வந்தாா். ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே இளம்பெண்ணின் நகை திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே புது பெண்ணிடம் இருந்து 25 பவுன் தங்கநகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள ஆத்தியான்குளம்... மேலும் பார்க்க

வி.கே.புரம் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் மாயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்ற நிலையில், விடுதிக்குத் திரும்பாமல் மாயமாகியுள்ளனா். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஓா் அரசு உதவி பெறும் ம... மேலும் பார்க்க

ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா். ரவணசமுத்திரம், வீராநதி ஆற்று ரயில் பாலம் அருகில் செங்கோட்டையிலிருந்து ஈரோடு சென்ற ரயிலில் அடையாளம் தெரியாத 40 வயது ம... மேலும் பார்க்க

காவல் துறை பறிமுதல் செய்த வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்

திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 23 ஆம் தேதி ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன. திருநெல்வேலி மாநகர காவல்துற... மேலும் பார்க்க