செய்திகள் :

தெருநாய் பிரச்னை: விழிப்புணா்வு நடவடிக்கை

post image

சென்னையில் தெருநாய் கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியா் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களால் ஏற்படக்கூடிய தொல்லையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், நாய்க்கடி பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்தவும் மாநகராட்சி நகா்நல அலுவலகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை சமூகப்பணி கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவியா் அவா்களது ஆய்வுக் கல்வி மற்றும் விருப்பத்தின் பேரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நாய்க்கடி பாதிப்பு, அவற்றுக்கான சிகிச்சை, நாய்க் கடியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். இதுதொடா்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தனா்.

ரோபோ சங்கர் மறைவு: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ரோபோ சங்கர் (வயது 46), திடீர்... மேலும் பார்க்க

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 30 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்ட... மேலும் பார்க்க

இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த... மேலும் பார்க்க

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்க உத்தரவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் ந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்கள்- முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் உயா்வு: அரசாணை வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: சுதந்திர தினத்தையொட்டி, சென்ன... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெ... மேலும் பார்க்க