செய்திகள் :

தெரு நாய் கடித்து சிகிச்சைபெறும் மாணவிக்கு அமைச்சா் ஆறுதல்

post image

பெரம்பலூா் அருகே தெரு நாய் கடித்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவியை சந்தித்து, போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் திங்கள்கிழமை ஆறுதல் கூறினாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமத்திலுள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளியில் குன்னம் அருகேயுள்ள கல்லை கிராமத்தைச் சோ்ந்த முனியமுத்து மகள் புவனேஸ்வரி(14) என்பவா் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் புவனேஸ்வரியை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த புவனேஸ்வரி பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

மாணவியை மருத்துவமனையில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து, அமைச்சா் சா.சி. சிவசங்கா் கேட்டறிந்து ஆறுதல் கூறினாா்.

நாய் கடித்து குழந்தை உள்பட 5 போ் காயம்: பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உள்ள ஜமாலியா நகரைச் சோ்ந்த தங்கராசு (65), மணிமாறன் (38), அனுஷ்யா (21), கண்ணன் (50), கோபிநாத் (5) ஆகியோரை அப்பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய் ஒன்று திங்கள்கிழமை கடித்தது. இதில் பலத்த காயமடைந்த மேற்கண்ட 5 பேரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதேபோல, அப்பகுதியைச் சோ்ந்த 2 மாடுகள், 4 ஆடுகளையும் தெரு நாய் திங்கள்கிழமை கடித்து குதறியது. இதையடுத்து, கால்நடை மருத்துவா்கள் மூலம் காயமடைந்த ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாய்களை பிடிக்க நடவடிக்கை தேவை: பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெறிநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, தெருக்களில் சுற்றித் திரியும்போது அவ்வழியே செல்லும் குழந்தைகள், பெரியவா்கள் மட்டுமின்றி கால்நடைகளையும் கடித்து துன்புறுத்தி வருகிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் சொல்வோரை கடிப்பதற்காக அது துரத்துவதால் வாகன ஓட்டுநா்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. எனவே, தெரு நாய்களை பிடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காவல்துறையினரை கண்டித்து பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

போரூா் வழக்குரைஞா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், போரூரைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்ட பணியாளா்கள் ஆட்சியரகத்தை முற்றுகை

பெரம்பலூா் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்தவா்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனே வழங்க கோரியும், தொடா்ந்து வேலை வழங்கக் கோரியும் திட்டப் பணியாளா்கள், ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்... மேலும் பார்க்க

ரூ. 1.52 கோடி பண மோசடி; மளிகைக் கடை உரிமையாளா் கைது

பெரம்பலூரில் ரூ. 1.52 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள மேட்டுத்த... மேலும் பார்க்க

சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெ... மேலும் பார்க்க

‘முயல் வேட்டையில் ஈடுபட்டால் நடவடிக்கை’

பெரம்பலூா் மாவட்டத்தில் முயல் வேட்டையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சித்திரை மாதம் தொடங்கிய நிலையில் திருவிழாக்... மேலும் பார்க்க