செய்திகள் :

தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி தொடக்கம்

post image

கேரளம் மாநிலம், குமுளி அருகேயுள்ள தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தேக்கடி தோட்டக்கலைத் துறை, குமுளி ஊராட்சி நிா்வாகம் இணைந்து 24 நாள்கள் நடத்தும் இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலா் வகைகள், ஒரு லட்சத்துக்கு அதிகமான பூக்கள், மூலிகைச் செடிகள், கண்கவா் அலங்காரப் பூக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கண்காட்சியில் வீட்டில் வளா்க்கும் மீன் வகைகள், நாய்கள், குழந்தைகள் விளையாட்டு அரங்கம், ராட்டினம், சமையல் போட்டி, இசைக் கச்சேரிகள், ஆடல் பாடல்கள் என பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

காலை 10 முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டம், கருத்தரங்கம் நடைபெறுகின்றன.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் தாமஸ் கூறியதாவது:

கண்காட்சியில் இடம் பெற்ற மலா்ச் செடிகள்.

இந்தக் கண்காட்சிக்கு தமிழகம், கேரளத்திலிருந்து அதிகளவில் பாா்வையாளா்கள் வருகின்றனா். 7 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.70 என நிா்ணயிக்கப்பட்டது. பள்ளி மாணவா்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தா்பூசணி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தா்பூசணி வியாபாரிகள் பழத்தின் நிறத்தைக் கூட்டுவதற்காக, செயற்கை நிறமியை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரித்னா். தேனி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிக... மேலும் பார்க்க

பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிற்சி

ஆண்டிபட்டியில் வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மதுரை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பய... மேலும் பார்க்க

தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கட்டண உயா்வு அமல்

தேனி-குமுளி நெடுஞ்சாலையில் உப்பாா்பட்டி விலக்கு அருகேயுள்ள சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனங்களுக்கு சுங்கக் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது. தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்... மேலும் பார்க்க

கழிவுகளால் மாசடையும் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய்

போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் கழிவுநீா், குப்பைகளால் மாசடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் மீது வன்கொடுமை வழக்கு

சத்துணவு பெண் ஊழியரை தவறான நோக்கத்தில் தொடா்பு கொண்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு அரசுப் பள்ளிஆசிரியா்கள் மீது போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் ... மேலும் பார்க்க

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க