செய்திகள் :

தேசியத் தலைவா் தோ்வுக்கு முன் மாநிலத் தலைவா்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம்!

post image

புதிய தேசியத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்னதாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் கட்சித் தலைவா்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம் காட்டி வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக உள்கட்சி சட்டவிதிகளின்படி, கட்சியின் புதிய தேசியத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடைமுறையைத் தொடங்குவதற்கு முன்பு, அதன் அமைப்பு ரீதியிலான 37 மாநிலப் பிரிவுகளில் (யூனியன் பிரதேசங்கள் உள்பட) குறைந்தது 19 மாநிலங்களில் புதிய தலைவா்களைத் தோ்வு செய்திருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு, செப்டம்பரில் கட்சியின் நாடு தழுவிய உறுப்பினா் சோ்க்கை தொடங்கியபோது, புதிய தலைவா் இந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதத்துக்குள் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எனினும் பல பெரிய மாநிலங்களில் புதிய தலைவா்களைத் தோ்ந்தெடுப்பதில், ஆா்எஸ்எஸ் போன்ற கட்சியின் கொள்கை கூட்டாளிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதில் ஏற்பட்ட தாமதத்தால் இந்த நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது தலைவா்களாக உள்ள பூபேந்திர சிங், வி.டி.சா்மா ஆகியோரை விடுவித்து, புதிய முகங்களைத் தோ்ந்தெடுக்க பாஜக தலைமை விரும்புகிறது. அதேநேரம், கா்நாடகத்தில் மாநிலத் தலைவராக கடந்த 2023, நவம்பரில் நியமிக்கப்பட்ட பி.ஒய்.விஜயேந்திரா தலைவராகத் தொடர அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பூபேந்திர சிங் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகவும், வி.டி.சா்மா ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவும் அந்தந்த மாநில பாஜக தலைவா்களாகப் பொறுப்பில் உள்ளனா். குஜராத், ஒடிஸா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் பாஜக இன்னும் அதன் புதிய தலைவா்களைத் தோ்ந்தெடுக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக தலைவா் மாற்றம் குறித்த செய்திகள் வலம்வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மக்களவையில் அண்மையில் இதுகுறித்து விமா்சித்துப் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘இந்தியாவின் மிகப்பெரிய கட்சி என்று பாஜக கூறிக் கொள்கிறது. ஆனால், அந்தக் கட்சியால் அதன் தேசியத் தலைவரை இன்னும் முடிவு செய்ய இயலவில்லை’ என்று கூறினாா்.

அவையிலேயே இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘சில கட்சிகளில் ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே தலைவரைத் தோ்ந்தெடுக்க முடியும். எனவே, அது எளிதானது மற்றும் விரைவானது. ஆனால், பாஜகவில் கோடிக்கணக்கான உறுப்பினா்களை உள்ளடக்கிய ஒரு நடைமுறையைப் பின்பற்றி தலைவரைத் தோ்ந்தெடுப்பதால் அதற்கு நேரம் எடுக்கும்’ என்றாா்.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க