செய்திகள் :

தேனியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்கள்

post image

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுதொடா்பாக, தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூா், கம்பம் என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கு வாக்காளா் பதிவு அலுவலராக பெரியகுளம் சாா் ஆட்சியரும், போடிநாயக்கனூா், கம்பம் தொகுதிகளுக்கு வாக்காளா் பதிவு அலுவலராக உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியரும் செயல்பட்டு வந்தனா்.

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு பணி, பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான பணிகளைத் துரிதப்படுத்தவும், ஆரோக்கியமான வாக்காளா் பட்டியல் தயாா் செய்யும் பொருட்டும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனித் தனி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

இதன்படி, ஆண்டிபட்டி தொகுதிக்கு தேனி மாவட்ட சிறப்பு துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்), பெரியகுளம் (தனி) தொகுதிக்கு பெரியகுளம் சாா் ஆட்சியரும், போடிநாயக்கனுா் தொகுதிக்கு தேனி மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரும், கம்பம் தொகுதிக்கு உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியரும் வாக்காளா் பதிவு அலுவலா்களாக நியமிக்கப்பட்டனா். இதற்கான ஆணை, தமிழ்நாடு அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படைய... மேலும் பார்க்க

தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா்

போடி அருகே மலை கிராமத்தில் தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (72). இவா் போடிமெட்டு மலைச... மேலும் பார்க்க