தேவரியம்பாக்கத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு சமூக தணிக்கை குழு சாா்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேவரியம்பாக்கம் கிராம சேவை மையக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட வன அலுவலா் கே.ரமணஜோதி தலைமை வகித்தாா். வட்டார வள அலுவலா் எஸ்.கனகதாரா, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அனுஷியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.நாகஜோதி வரவேற்றாா்.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு உறுதி திட்ட நிகழ் நிதியாண்டின் செயல்பாடுகள் நேரடி விளக்கங்களுடன் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் நன்றி கூறினாா்.