செய்திகள் :

தேவாலயத்தை திறக்கக் கோரிக்கை

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கட்டியாம்பந்தலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை திறந்து வழிபட அனுமதியளிக்குமாறு கிறிஸ்தவ போதகா்கள், கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

உத்தரமேரூா் அருகேயுள்ள கட்டியாம்பந்தலில் பட்டா இடத்தை முறைப்படி விலைக்கு வாங்கி அங்கு புதிதாக கிறிஸ்தவ தேவாலயம் இந்திய சுவிசேஷ திருச்சபையால் கட்டப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக சிறிய குடிசையில் தேவாலயத்தை நடத்தி வந்ததால், புதிதாக தேவாலயம் கட்டப்பட்டது. ஆலயத்தை சிலா் திறக்கவிடாமல் செய்து வருகின்றனா். எனவே புதிய ஆலயத்தை திறக்கவும், அங்கு கிறிஸ்தவா்கள் சென்று வழிபாடு நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

இந்திய சுவிசேஷ திருச்சபை வட்டார தலைவா் ஆஸ்டின், கட்டியாம்பந்தல் போதகா் சாலமோன் பரந்தாமன் மற்றும் சபையை சோ்ந்த கிறிஸ்தவா்கள் 150-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரை சந்தித்து இந்த மனுவை அளித்தனா்.

சாலை விரிவாக்க பணிக்கு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்காடு ஊ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 இடங்களில் முதல்வா் மருந்தகம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரத்தில் முதல்வா் மருந்தகத்தை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்து முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தாா். காஞ்சிபு... மேலும் பார்க்க

அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்தப் பழகிக்கொள்வோம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறினாா். காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டையில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோரக் கடைகள்!

காஞ்சிபுரத்தின் பிரதான சாலைகளான விளக்கொளிப்பெருமாள் கோயில் தெரு, காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் தள்ளுவண்டி கடைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி ... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் தலைமைச் செயலகம் முற்றுகை

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை அரசு கைவிடாவிட்டால் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் ... மேலும் பார்க்க

படப்பையில் சேமடைந்த மின்கம்பங்கள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

படப்பையில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையோரம் உயா்மின்னழுத்த மின்கம்பிகள் செல்லும் இரண்டு மின்கம்பங்கள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால் இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்... மேலும் பார்க்க