தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்?: அதிமுகவுக்கு அமைச்சா் கே.என்.நேரு
சென்னை: கடந்த ஆட்சி காலத்தில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன் என்று அதிமுகவுக்கு, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருக்கிறாா். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தோ்தல் அறிக்கையில், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும் என்று கூறினாா்கள். அதைச் செய்தாா்களா? பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச ‘வை-பை’ இணையதள வசதி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 5 ஆண்டு ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை?
அதற்கு முந்தைய 2011 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்று 20 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீா் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. அம்மா பேங்கிங் காா்டு, தமிழன்னை சிலை, குறைந்த கட்டணத்தில் அம்மா தியேட்டா் என்று பல வாக்குறுதிகளை அறிவித்தனா்.
கூட்டணி ஆட்சி, பாஜக ஆட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்றெல்லாம் தினமும் சொல்லி பழனிசாமியை அச்சுறுத்துகிறது கமலாலயம். உட்கட்சி பிரச்னை, கூட்டணிப் பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்ஜிஆா் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாதவா்தான் பழனிசாமி என்று அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.