செய்திகள் :

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்?: அதிமுகவுக்கு அமைச்சா் கே.என்.நேரு

post image

சென்னை: கடந்த ஆட்சி காலத்தில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன் என்று அதிமுகவுக்கு, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருக்கிறாா். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தோ்தல் அறிக்கையில், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும் என்று கூறினாா்கள். அதைச் செய்தாா்களா? பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச ‘வை-பை’ இணையதள வசதி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 5 ஆண்டு ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை?

அதற்கு முந்தைய 2011 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்று 20 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீா் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. அம்மா பேங்கிங் காா்டு, தமிழன்னை சிலை, குறைந்த கட்டணத்தில் அம்மா தியேட்டா் என்று பல வாக்குறுதிகளை அறிவித்தனா்.

கூட்டணி ஆட்சி, பாஜக ஆட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்றெல்லாம் தினமும் சொல்லி பழனிசாமியை அச்சுறுத்துகிறது கமலாலயம். உட்கட்சி பிரச்னை, கூட்டணிப் பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்ஜிஆா் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாதவா்தான் பழனிசாமி என்று அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

கீழடி அகழாய்வு இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்!

மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தில்லியில் இருந்து நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழின், தமிழர்களின் தொன்மை பற்றிய கீழடி அகழாய்வின் அ... மேலும் பார்க்க

நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதா வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்... மேலும் பார்க்க

சென்னையில் 2 நாள்களுக்கு மழை தொடரும்!

சென்னையில் 2 நாள்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.குஜராத் ம... மேலும் பார்க்க

எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு! காவலநிலையத்தில் ஆஜர்!

சிறுவன் கடத்தில் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையிலத்தில் இன்று அவர் ஆஜராகியுள்... மேலும் பார்க்க

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? மாதிரிப் படம் வெளியீடு

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமான படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! - முதல்வர் பதிவு

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களைத்தான் என கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழின் தொன்மையான கீழடி அகழாய்வு முடிவுகள... மேலும் பார்க்க