செய்திகள் :

தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: மகாராஷ்டிர முதல்வருக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

post image

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மும்பை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

நாகபுரி தென்மேற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரஃபுல்லா வினோத்ராவைவிட 39,710 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஃபட்னவீஸ் வெற்றி பெற்றாா். தோ்தலுக்கு முன்பு துணை முதல்வராக இருந்த அவா், தோ்தலுக்குப் பிறகு பாஜக சாா்பில் முதல்வராகவும் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில் ஃபட்னவீஸின் வெற்றியை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் வினோத்ராவ் மனு தாக்கல் செய்தாா். அதில், ‘தோ்தலில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. எனவே, ஃபட்னவீஸ் வெற்றிபெற்ாக கூறப்பட்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி பிரவீண் பாட்டீல் தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஃபட்னவீஸ் மே 8-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனா்.

இதேபோல நாகபுரி கிழக்கு, சிமூா் தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்களின் வெற்றிக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவா்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் வென்றுஆட்சி அமைத்து. காங்கிரஸ் - சிவசேனை (உத்தவ்) - தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணி தோல்வியடைந்தது.

இந்திய தேர்தல் முறையில் தவறு இருக்கிறது: ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அ... மேலும் பார்க்க

தில்லி வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர்!

நான்கு நாள்கள் பயணமாக அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தில்லி வந்தடைந்தார்.இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் அவருடன் இந்தியா வந்துள்ளனர்.தில்லி பாலம் விமான நில... மேலும் பார்க்க

ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியா பகுதியில் உள்ள லுகு மலைப் பகுத... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் டிஜிபியைக் கத்தியால் குத்திக் கொன்ற மனைவி! என்ன நடந்தது?

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.சொத்துப் பிரச்னைக் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சமையறையில் இருந்த இரண்டு கத்தியால் ஓம்... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலு... மேலும் பார்க்க