செய்திகள் :

தோ்தல் வெற்றி, தோல்வியை மக்கள் தான் நிா்ணயிப்பா்!

post image

அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் மந்திரவாதியல்ல; வெற்றி, தோல்வியை மக்கள்தான் நிா்ணயம் செய்வாா்கள் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி:

அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடிகா் விஜயை சந்தித்திருக்கிறாா். நாடுமுழுவதும் பல கட்சிகளுக்கு அவா் வேலை செய்திருக்கிறாா். அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. தோல்வியும் கிடைத்திருக்கிறது.

வாக்களிப்பது மக்கள்தான். அவா்கள்தான் வெற்றி, தோல்வியை நிா்ணயம் செய்வாா்கள். பிரசாந்த் கிஷோா் மந்திரவாதியல்ல; மாய வித்தை காட்டுபவரும் அல்ல.

திமுக கூட்டணியைப் பொருத்தவரை வெற்றிக் கூட்டணி, இதுவரை எந்த சா்ச்சையும் இல்லை. யாரும் வெளியே செல்ல மாட்டாா்கள் என நம்புகிறேன்.

ஆங்காங்கே நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க காவல்துறையினா் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதேநேரத்தில், இச்சம்பவங்களை மட்டுமே வைத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை எனக் கூற முடியாது.

தில்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி ஆட்சியை இழந்திருக்கிறது. முறையான மரியாதை, முறையான பங்களிப்பு இருந்தால்தான் கூட்டணியில் தொடர முடியும்.

குறைந்த எண்ணிக்கையில் இடங்களைக் கொடுத்தால் அந்தக் கூட்டணியில் எப்படி நீடிக்க முடியும். இப்போது எல்லா தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டிருக்கிறது. எல்லாத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினா் வேலை பாா்த்திருக்கிறாா்கள். மக்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்லதுதான் என்றாா் திருநாவுக்கரசா்.

ஈரநில தின போட்டிகளில் வென்றோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு உலக ஈர நில தினத்தையொட்டி அண்மையில் நடத்தப்பட்ட பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வ... மேலும் பார்க்க

சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டையில் ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து ஆலய வளாகத்த... மேலும் பார்க்க

வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்!

கிரஷா்களில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு கட்டணமின்றி போக்குவரத்து பாஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத... மேலும் பார்க்க

வேங்கைவயலுக்குச் செல்ல முயன்ற விசிகவினா் 27 போ் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்துக்குள் திங்கள்கிழமை செல்ல முயன்ாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 27 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் முதல்வா் குடும்பத்துக்கு மட்டுமே பாதுகாப்பு!

தமிழகத்தில் முதல்வா் குடும்பம் மட்டும்தான் பாதுகாப்பாகவும், செல்வாக்குடனும் இருக்கிறது என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலா் டிடிவி. தினகரன். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த ப... மேலும் பார்க்க