செய்திகள் :

தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

post image

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,434.24 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.43 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 841.52 புள்ளிகள் உயர்ந்து 25,028.60
புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 277.70 புள்ளிகள் உயர்ந்து 25,002.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில வாரங்களில் குறைந்த நிஃப்டி மீண்டும் 25,000-யைக் கடந்துள்ளது.

சென்செக்ஸ் பங்குகளில், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, மாருதி, கோடக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ் , ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

சன் பார்மா, இன்ஃபோசிஸ், நெஸ்லே, ஹெச்சிஎல் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமாக ஆர்பிஐ குறைத்துள்ளது. இது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி ஏற்றத்தில் வர்த்தகமாகும் நிலையில் சீனாவின் ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. அமெரிக்க சந்தைகள் நேற்று சரிவுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.28 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 65.16 அமெரிக்க டாலராக உள்ளது .

தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 85.87 ஆக உள்ளது.

இதையும் படிக்க | குழந்தைகள் ஏன் சாப்பிட மறுக்கிறார்கள்? உடல் பருமன் ஏன்? காரணமும் தீர்வும்!

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி! விலை குறைந்தது!!

சென்னை: சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,200 குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஜூன் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.150 குற... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவு!

மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் பணப்புழக்கத்தை வழங்க வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்ததைத் தொ... மேலும் பார்க்க

தங்கம் வாங்க இன்று நல்ல நாள்.. ஏன் தெரியுமா? விலைதான்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.புதன்கிழமை தங்கம் விலை ரூ.8... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் புதன்கிழமை முத... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க